tamilnadu

img

கார்ப்பரேட்டுகளை வாழவைக்க “ஒரே நாடு, ஒரே உரம்” திட்டம் பெயர் மாற்றத்தால் எந்தப் பயனும் இல்லை விவசாயிகளுக்கு

ஒன்றிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது, அதில் “ஒரே நாடு, ஒரே உரம்” திட்டத்தைச்  செயல் படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. அதாவது மானிய விலையில் வழங்கப்படும் அனைத்து உரங்களையும் ஒரே மாதிரியான பைகளில் அடைத்து விற்க வேண்டும். அந்தப் பைகள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும் உரமூடைகளில் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர் இடம் பெறக் கூடாது. ‘பாரத் யூரியா,’ ‘பாரத் டிஏபி’ என்றே குறிப்பிட வேண்டும். அனைத்து பிராண்டுகளிலும் ‘பாரத்’  என்ற பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும். “பிரதான் மந்திரி பாரதிய ஜனுர்வ ரக் பரியோஜ்னா (பிஎம்பிஜேபி) என்ற திட்டப் பெயரும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விவசா யிகள் பொறுப்புடன் உரங்களைப் பயன் படுத்தவேண்டும் என பிரதமர் மோடி கூறும் வாசகமும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது

மோடியின் பெயர் திணிப்பு 

உர நிறுவனங்கள் புதிதாகப் பைகளைத் தயாரிக்க வேண்டும். அதில் இடம்பெற வேண்டிய இலச்சினை குறித்து மட்டுமே முதலில் வழிகாட்டப்பட்டிருந்தது. பின்னர் திடீரென “விவசாயிகளுக்குப் பிரதமர் மோடி யின் செய்தியையும் கொண்டு செல்ல வேண் டும்” என மற்றொரு அறிவிப்பு வெளியிடப் பட்டது. “ஒரே நாடு, ஒரே உரம்” திட்டம் மூலம் உரங்களின் உற்பத்தி முறைப்படுத்தப்படும். உரங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நிலைத் தன்மையுடன் கூடிய விவசாய நடைமுறை கள் உருவாக்கப்படும். நாட்டின் பல்வேறு பகு திகளில் “பிராண்ட்” முன்னுரிமை காரணமாக உரங்கள் குறுக்குவழியில் கொண்டு செல்லப் படுகிறது. அது தடுக்கப்படும் என்கிறது ஒன்றிய விவசாயத்துறை அமைச்சகம். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் யூரியாவின் விலை அரசால் நிர்ணயம் செய் யப்படுகிறது. அரசு நிர்ணயம் செய்யும் விலையில் நிறுவனங்கள் விற்கின்றன.

விவசாயிகளின் பெயரில் உற்பத்தியாளர்களுக்கே மானியம்

உரங்களின் உற்பத்திச் செலவில் 80-90 சதவீதத்தை உற்பத்தியாளர்களுக்கு அரசு மானியமாக வழங்குகிறது. ஒன்றிய அரசு உணவு மானியத்திற்கு அடுத்ததாக, உரத் திற்குத்தான் அரசு அதிகளவில் பணத்தை ஒதுக்க வேண்டியுள்ளது.  சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் மானியமாக ஒதுக்கப்படு கிறது.  யூரியாவின் சில்லரை விலையில் 80 சத வீதம், டிஏபியில் 65 சதவீதம், என்பிகேயில் 55 சதவீதம் மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (எம்ஓபி) விலையில் 31 சதவீதம் அரசு மானியம் அளிக்கிறது. சரக்கு மானியமும் ஆண்டுக்கு ரூ.6,000-9,000 கோடி வரை வழங்கப்படுகிறது. உற்பத்தி செய்யப் படும் உரங்களின் விவரக்குறிப்புகள் ஒரே மாதி ரியாக இருந்தாலும், பொருட்கள் வெவ்வேறு பிராண்டுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுச் சந்தைப்படுத்தப்படுகின்றன  விவசாயத் திற்கும்-விவசாயிகளுக்கும் இவ்வளவு பெரிய தொகை போகிறதே எனப் புலம்புகி றது மோடி அரசு. உர நிறுவனங்களுக்கு ஏற்படும் உற்பத்தி மற்றும் இறக்குமதி செலவு போன்றவை மானியத்தில் தான் ஈடுசெய்யப்படுகிறது. ஒரே விதமான உரங்களைத் தயாரிக்கும் பல நிறுவனங்கள், பல விதமான பிராண்ட் பெயர்களைக் கொண்டிருப்பதால், அவை தயாரிக்கும் இடங்களிலிருந்து விற்பனை ஆகும் இடங்களுக்குச் சென்று சேருவதற்கு ஆகும் செலவில், அரசின் மானியம் பெரும ளவில் வீணாவதாகக் கூறுகிறது ஒன்றிய அரசு.

விலை குறையும் எனும்  போலி வார்த்தைகள்

உரங்களின் விலையைக் குறைப்பது, ஆண்டு முழுவதும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தத் திட்டத்தைக் கொண்டுவருகிறதாம் ஒன்றிய அரசு. எல்லா உரங்களும் ஒரே பெயரில் வழங்கப்படுவ தால், ஒரு குறிப்பிட்ட பெயர் கொண்ட நிறுவ னத்தின் உரம், சந்தைகளில் கிடைக்காத நேரத்தில், மற்ற நிறுவனத்தின் உரத்தை வாங்க விவசாயிகள் யோசிக்கமாட்டார்கள். குறிப்பிட்ட பெயர் கொண்ட உரத்தைத் தேட மாட்டார்கள் என்று கூறுகிறது.

உர நிறுவனங்கள் கூறுவதென்ன?

எல்லா உர நிறுவனங்களின் உரமும் ஒரே பெயரில் விற்கப்பட்டால் ஒருவேளை,  உரமூட்டையில் தரம் குறைவாகவோ, அல்லது மோசமாகவோ இருந்தால், ஒட்டு மொத்தமாக விவசாயிகள் எல்லாப் பிராண்ட் உரங்களையும் வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை எல்லா நிறுவனங்களும் ஏற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது உர நிறுவனங்களின் வாதம். தங்களது பிராண்ட் பெயரை விவசாயிகள் மத்தியில் நிலை நிறுத்துவதற்காகவும் நற் பெயரைப் பெறுவதற்காகவும் பல ஆண்டு களாக உர நிறுவனங்கள் பணத்தைச் செல விட்டுள்ளன. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் புதிய அல்லது மேம்பட்ட உரங்களை அறி முகப்படுத்துவதில் ஆர்வம் காட்டமாட்டார் கள் என்ற கருத்தும் உள்ளது. “ஒரே நாடு, ஒரே உரம்” திட்டம் குறித்து இந்தியாவின் விவசாய வளர்ச்சிக்குப் பங்களிப்பைச் செலுத்தி வரும் நபார்டு வங்கியின் தொழிற்சங்கமான அகில இந்திய நபார்டு ஊழியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் ராணா மித்ரா, கூறுகையில், “ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்தத் திட்டம் குறித்து வெளி யிடப்பட்ட சுற்றறிக்கை “முரண்பாடுகள் நிறைந்தது” என்றார்.

கார்ப்பரேட்டுகளுக்குக்  கதவைத் திறக்கவே...

“இரசாயன உரங்களின் பயன் பாட்டைக் குறைத்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி நிலத்தையும், விவசாயத்தை யும் காப்பாற்றுவது தான் அரசின் நோக்கம் என்றால் அதை வரவேற்கலாம். ஆனால் அரசின் நோக்கம் “விவசாயத்தில் எளிதில் கார்ப்பரேட்டுகள் நுழைவதற்கு வழி வகைச் செய்வதாக உள்ளது” உரங்கள், விதைகள், உற்பத்திப் பொ ருட்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் விளை பொருட்களை மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட விவசாய இடுபொருள் சந்தை யில் தற்போது கார்ப்பரேட்டுகள் தான் முன்னிலையில் உள்ளனர். “ஒரே நாடு, ஒரே உரம்” திட்டத்தால் பொ துத்துறை உர நிறுவனங்கள் “மூடுவிழாவை” நோக்கிப் பயணிக்கும். பொதுத்துறை நிறுவ னங்களை மூடிவிட்டால், உரம் உற்பத்தி ஒட்டுமொத்தமாகக் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்றுவிடும். அவர்களுக் கான கதவை மோடி அரசு திறந்தே வைத்துள் ளது. விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்காததால் உற்பத்தியில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் “உணவு தானியங்கள் பற்றாக் குறை” ஏற்பட்டு விலைவாசி உயர்ந்து வரு கிறது. இந்த விலை உயர்வு ஏழை-எளிய மக்கள் ஒவ்வொருவரின் கழுத்தையும் நெரிக் கிறது. மற்றொருபுறம் மக்கள் பசியாலும், வறுமையாலும் மக்கள் வறுமையில் வாடு வது அதிகரித்துள்ளது.

“இந்திய விவசாயத்தைக் கார்ப்பரேட் கள் கையகப்படுத்தும் ஒரு பெரும் திட்டத்தின் ஒரு பகுதி தான் ‘ஒரே நாடு, ஒரே உரம்’ என்ற முழக்கம். இதன் பின்னணியில் உள்ள முழு அரசியல் பொருளாதாரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் யூரியா விற்பனை தொடங்கப் படும். பின்னர் பயிர் ஊட்டச்சத்து உரங்களும் பாரத் என்ற ஒரே பிராண்டின் கீழ் விற்கப் படும். புதுதில்லியில் ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்குத் தொழிற்சங்கங்களும் ஆதரவளித்தன. புதிய வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றது. விவசாயிகள் போராட்டம் வெற்றி யடைந்தது. அதே நேரத்தில், விவசாயிகளின் பொரு ளாதாரத்தோடு, வாழ்க்கையோடு தொடர்பு டைய பல துறைகளில் விவசாயத்தைப் பெரு நிறுவனமயமாக்கும் போக்கு உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பெயர் மாற்றத்தால் பலனில்லை

உள்ளூர் கண்டுபிடிப்புகள், இயற்கை விவ சாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்போடு இயைந்த  விவசாயம் முற்றிலுமாகத் தடுக்கப்படும். இது விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும்.  இந்தத் திட்டம் குறித்து தமிழ்நாடு விவ சாயிகளின் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பெ.சண்முகம் கூறுகையில், “எல்லா உரங்களின் பெயர்களும் பாரத் என்ற அடை மொழியுடன் விற்கப்படுவதால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது. விலை மாநிலத் த்திற்கு மாநிலம் வேறுபடும். “உரத்தின் விலையை அரசு கட்டுப்படுத்துவதற்குப் பதில், பெயரை மாற்றுவதால் விவசாயிக ளுக்கு லாபம் இல்லை.  மண்ணுக்கு ஏற்ற உரத்தைத்தான் விவ சாயிகள் தேர்வு செய்வார்கள்.  50 சதவீதத் திற்கும் அதிகமான உரங்கள் வெளிநாடு களிலிருந்து தான் இறக்குமதி செய்யப் படுகிறது. நம் மண்ணுக்கு ஏற்ற உர உற்பத்தி யைத் தொடங்கினால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார். நாடு முழுவதும் 3.3 லட்சத்திற்கும் மேற் பட்ட உர சில்லரை விற்பனைக் கடைகள் கிசான் சம்ருதி கேந்திரங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இந்தக் கிசான் சம்ருதி கேந்திரங்கள் விதைகள், உரங்கள் மற்றும் பண்ணைக் கருவிகள் போன்ற விவசாய இடுபொருட்களை வழங்குவதோடு மண், விதைகள் மற்றும் உரங்களுக்கான பரி சோதனை வசதிகளையும் வழங்குமாம்.