சென்னை,மார்ச் 19- தமிழ்நாட்டில் 5 நாட்கள்மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்கு களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவு கிறது. இதன் காரணமாக, மார்ச் 20 முதல் 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.03.2023 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். இவ்வாறு தெரிவித்திருக்கிறது.