அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஜூலை 18 அன்று தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நாகார்ஜூனா சாகர் அணைக்கட்டு பகுதியில் துவங்கியது. அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் தலைமை வகித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் பி.வெங்கட், அகில இந்திய துணைச்செயலாளர்கள் சிவதாசன் எம்.பி., விக்ரம் சிங், துணைத்தலைவர்கள் பானுலால்சாகா ,ஏ.லாசர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி, மத்திய செயற்குழு உறுப்பினர் க.பூங்கோதை ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் புதனன்றும் நடைபெறுகிறது.