மதுரை, டிச.11- தமிழகத்திலுள்ள 48 முது நிலை ஆலயங்களில் செல்போன் தடை அமல்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரி வித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையிலுள்ள ராக்காயி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதனை தொடர்த்து சோலை மலை முருகன் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பில் உபயதாரர்கள் மூலம் வெள்ளிக்கதவுகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பத்தி ரப்பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டி ருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களி டம் அமைச்சர் சேகர்பாபு பேசுகை யில், ‘‘பழமையான கோயில் களில் ரூ.100 கோடி மதிப்பில் ஒதுக்கி திமுக அரசு, பணிகளை செய்து வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் பணி விரைந்து முடிக்கப்படும். ஆலயங்களில் செல்போன் பயன்பாடு தடை குறித்து நீதி மன்ற உத்தரவை பொறுத்தவரை யில், ஏற்கனவே மதுரை மீனாட்சி யம்மன் கோயிலில் இந்த நடை முறை அமலில் உள்ளது. இதே போல தமிழகத்திலுள்ள 48 முது நிலை ஆலயங்களில் செயல் படுத்தப்பட்டு, முதலில் திருச்செந் தூரில் அமல்படுத்தப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் அய்யர்மலை, சோழிங்கர் உள்ளி ட்ட இடங்களில் மலைக்கோயில் களில் ரோப்கார் சேவையை ஏனோ தானோ என செய்தனர். ஆனால், திமுக அரசு முறையாக நிதி ஒதுக்கி, மலைக்கோயில்களில் ரோப்கார் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட சிலைகள் தங் களுக்கு சொந்தமானது என கோயில் நிர்வாகம் தகுந்த ஆதாரம் மற்றும் சான்றிதழுடன் அணுகினால் மட்டுமே அவர்களி டமே ஒப்படைக்கப்படும். வெளி நாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 82 சிலைகள் மீட்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. தமிழகத்தில் திருடுபோன 166 சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன’’ என அவர் தெரிவித்தார்.