ஆளுநரின் அதிகார அத்துமீறலுக்கு சிபிஐ கண்டனம்
துணைவேந்தர்கள் மாநாடு அறிவிப்பு
லகிரியில் மூன்று நாட்கள் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், இதில் குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்வார் என்றும் அறிவித்திருக்கும் ஆளுநரின் அதிகார அத்துமீறல் உச்சத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரி வித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஆரம்ப நாளில் இருந்தே மக்களால் தேர்வு செய்து, அமைக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வரு கிறார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புக்கும், மரபுக்கும் தீராக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தரம் தாழ்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணு கியது. தமிழ்நாடு அரசின் முறையீடுகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. இப்போது, சட்டப்படி வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர், ஏப்.25, 26, 27 தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, நீலகிரி ஆளு நர் மாளிகையில் நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் குடிய ரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என்று அறிவித்திருப்பதும் ஒரு அசாதாரண நிலை, நெருக்கடியை உருவாக்கும் திட்டமாக தெரிகிறது. ஆளுநரின் அதிகார அத்துமீறல்களை தடுக்க வேண்டிய குடியரசுத் துணைத் தலைவர், அவருடன் இணைந்து செய லாற்றுவது அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக் கும் அரசியல் சதியா? என ஆழ்ந்த சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் காலூன்ற வேண்டும் என்ற நாக்பூர் குரு பீடத்தின் சேவகர்களாக செயல்படும் ஆளு நர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பங்கேற்கும் துணை வேந்தர்கள் மாநாட்டை பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும். ஆர்.என்.ரவி யின் தொடரும் அதிகார அத்துமீறல்களை தடுத்து நிறுத்த, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு நேரடி நட வடிக்கையில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.