சென்னை, நவ.7- கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி காப்புக்காடுகளில் உள்ள ஒரு பகுதி யை காவிரி தெற்கு வனவிலங்கு சர ணாலயமாக தமிழக அரசு அறிவித் துள்ளது. 686.406 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட இது, தற்போது காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயமாக உள்ள காடுகளுடன் இணைந்த பாது காக்கப்பட்ட நிலப்பரப்பின் ஒரு பகுதி யாக இருக்கும். இது கர்நாடகா மற் றும் தமிழ்நாடு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் வனப் பகுதிகளை உள்ளடக்கிய ஓசூர் வனக் கோட்டத் தின் அஞ்செட்டி, உரிகம் மற்றும் ஜவளகிரி வனப் பகுதியில் உள்ள 686.406 சதுர கிலே மீட்டர் பரப்பள வுள்ள காப்புக் காடுகளை உள்ளடக் கிய காவிரி தெற்கு வனவிலங்கு சர ணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
சட்ட நிலை மற்றும் பாதுகாப்பு
இந்த சரணாலயம் 50 கி.மீ.க்கு மேல் நீண்டிருக்கும். பாதுகாக்கப் பட்ட பகுதிகளின் தொடர்ச்சியான வலையமைப்பிற்கு ஒரே மாதிரியான சட்ட அந்தஸ்து மற்றும் பாதுகாப்பை வழங்கும். மலை மகாதேஷ்வரா வன விலங்கு சரணாலயம், கர்நாடகா வின் பில்லிகிரி ரங்கசுவாமி கோயில் புலிகள் காப்பகம் மற்றும் தமிழ்நாட் டின் சத்தியமங்கலம் புலிகள் காப்ப கம் மற்றும் ஈரோடு வனப் பிரிவு ஆகியவற்றின் மூலம் நீலகிரி உயிர்க்கோள காப்பகத்திற்கு அறி விக்கப்பட்ட நிலப்பரப்பையொட்டி இந்த வனவிலங்கு சரணாலயம் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. முதன்மை தலைமை வனப் பாது காவலர் மற்றும் தலைமை வன விலங்கு காப்பாளரின் வரைவு அறி விப்பு முன்மொழிவின் விளைவாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது.
யானைகளின் வாழ்விடம்
இந்த அறிவிப்பின்படி, தற்போது காவிரி தெற்கு வனவிலங்கு சரணா லயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலப் பிரப்பு, நந்திமங்கலம்-உலிபண்டா வழித்தடம் மற்றும் கோவைப்பள் ளம்-அனேபித்தஹல்லா ஆகிய இரண்டு யானை வழித்தடங்களை உள்ளடக்கிய முக்கியமான யானை களின் வாழ்விடமாகும். காவிரிப் படு கையில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு காவிரி ஆற்றை நம்பியி ருக்கும் ஏராளமான நதி உயிரினங்க ளுக்கும் முக்கியமானது என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சர ணாலயத்தின் வளமான பல்லுயிர்ச் சூழல் 35 வகையான பாலூட்டிகளுக் கும், 238 வகையான பறவைகளுக் கும் ஆதரவளிக்கிறது. இதில் சிவப்பு- பட்டியலிடப்பட்ட உயிரினங்களும் அடங்கும்.
புலிகள் பாதுகாப்பு
காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயத்தின் அருகில் உள்ள பகுதிகளில் புலிகள் பாதுகாப்பின் தாக்கம் அதிகமாக உள்ளது; மேலும் வசிப்பிட மேம்பாடு இரை தளத்தை மீட்டெடுக்கவும், கடந்த காலத்தில் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்த புலி களுக்கு ஆதரவாகவும் இருக்கும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.