தஞ்சாவூர், மே 8- கல்லணையில் மணல் குவாரிக்கு தமிழக அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்து கல்லணை பாதுகாக்க வேண்டும் என்று கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை யில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறை களை மனுக்களாக அளித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் வெ.ஜீவக்குமார் தலைமையில் பொன்னு ராமன், பாலகணேசன், உமர்முக்தார், ராஜேந்திரன், சங்கர் உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில், ‘‘நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறைக்கு தமிழக அரசு 25 இடங்களில் மணல் குவாரிகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. நிலத்தடி நீருக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்து ஏற்படுத்தும் வகையில் மணல் குவாரிகள் இயக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட, அளவைவிட ஆறுகளில் பெரிய குழிகள் தோண்டப்படுகின்றன. மணல் அள்ள ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உயர்நீதிமன்றத்திலும் இது குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழக அரசின் இப்போதைய அறிவிப்புப் படி காவிரி, கொள்ளிடம், வைப்பாறு, வெள்ளாறு உள்ளிட்ட ஆறுகளில் 25 ராட்சத மணல் குழிகள் ஓட்டை போட்டு திறக்கப்படு கின்றன 7.51 லட்சம் அலகுகள் மணல் வெட்டி எடுக்க அனுமதி தரப்படுகிறது. தமிழகம் தன் கனிமவளத்தை இழந்து ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் வற்றிக் காணப்படுகின்றன. இதனால்தான் கல் குவாரிகளில் எம்.சாண்ட் எனப்படும் நொறுக்கப்பட்ட கல் மணல் விற்பனை தமிழ கத்தில் துவக்கப்பட்டது. மலேசியாவி லிருந்து மண் இறக்குமதி நடந்தது. இந்த நிலையில் மீண்டும் மணல் குவாரிகள் திறப்ப தும் அவற்றில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதும் சட்ட விரோதமான கொள்ளைக்கு சட்டப்பூர்வமான லைசென்ஸ் வழங்குவதாகும். மணல் குவாரிக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் கல்லணையும் இடம் பெற்றுள் ளது. கல்லணை பாசன வரலாற்றில் தமிழ கத்தின் அடையாளம். ஈராயிரம் ஆண்டு களுக்கு முந்தைய கல்லணைக்கு இது வரை யாரும் ஊறு நினைத்ததில்லை. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற கல்லணைக்கு ஒரு ஆபத்து நேர்வது மனிதகுல நாகரிகத்துக்கு இழுக்காகும். முக்கொம்பு பாலம் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப் பட்டது. அது வெறும் செய்திதான். கல்ல ணையோ ஒரு வரலாறு. மேலும் கல்ல ணைக்கு தேவை பராமரிப்புதான். அதன் அருகில் குழி தோண்டுவது அல்ல. இங்கு ஏற்கனவே கல்லணையில் மணல் அரிப்பும் சரிவும் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலேய பொறியாளர் ஆர்தர் காட்டன் வியந்து பிரமித்த கல்லணைக்கு ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த தமிழ கத்திற்கும் கேடு தரும். எனவே கல்லணை உள்ளிட்ட இடங் களில் மணல் குவாரி திறக்க அரசு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.