பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய நூல் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் டிவிட்டர் பதிவில், “ஆர்கனைசர் நவம்பர் 10-ஆம் தேதி இதழில் ஏபிவிபி அமைப்பு கோரிக்கை வெளியிடப்பட்டதை ஒட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் Walking with the comrades புத்தகம் நீக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது.பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு, கல்விக்கான நிலைக்குழு , ஆட்சிக்குழு ஆகிய மூன்று கூட்டங்களிலும் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் எந்த ஒரு பாடத்திட்டத்தையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும் . எனவே இந்த அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.