உச்ச நீதிமன்றத்தில் அரசு எழுத்துப்பூர்வ வாதம்
புதுதில்லி, டிச.17- ஜல்லிக்கட்டு விவசாயத்தோடும், தமிழர் களின் பண்பாட்டோடும் ஒன்றிய விளை யாட்டு என்பதுடன், அதில், காளைகள் துன் புறுத்தப்படுவதில்லை; மாறாக, பெருமைப் படுத்தப்படுகின்றன என்பதால், ஜல்லிக் கட்டுக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் துன்புறுத்துகிறார்கள்; காளைகள் கொல்லப் படுகின்றன; சட்டப்படி இது தவறு; ஆனால், தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து உள்ளது;
இந்த சிறப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ‘பீட்டா’, (People for the Ethical Treatment of Animals - PETA), ‘கூபா’ (Compassion Unlimited Plus Action - CUPA) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலை மையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனி ருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக் குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஒரு மாதத் திற்கும் மேலாக இந்த வழக்குகள் மீது விசா ரணை நடத்தியது. டிசம்பர் 8-ஆம் தேதி, அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மனு தாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக் கல் செய்யலாம் என்று நீதிமன்றம் கூறி யிருந்தது. தீர்ப்பையும் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், ஜல்லிக்கட்டின் போது எந்த விதிமீறலும் இல்லை என்று தெரி வித்துள்ளது. ‘‘ஜல்லிக்கட்டு விளையாட்டு பொழுது போக்கிற்காக நடத்தப்படும் விளையாட்டு அல்ல. காலம் காலமாக நடத்தப்படும் இந்த விளையாட்டு, விவசாயத்தோடும், தமிழர் களின் வாழ்வோடும் ஒன்றிப்போன ஒன்று. தமிழக கலாச்சாரம், பாரம்பரியம், நாட்டுக் காளைகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளை யாட்டின் போது காளைகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை. மாறாக, காளை களை பெருமைப்படுத்துவதாகவும், கவுர விப்பதாகவுமே ஜல்லிக்கட்டு உள்ளது. காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக அனைத்து வழிமுறைகளும் ஜல்லிக்கட்டில் கடைப்பிடிக்கப்படுகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.