தஞ்சாவூர், மே 25- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு, 103 ஆண்டுகளுக்கு முன்பு மகப்பேறு நிலையத்தை நன்கொடையாக கட்டிக்கொடுத்தவரின் வாரிசுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டுக் கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்து தங்கள் முன்னோர்கள் கட்டித்தந்த கட்டடத்தை கண்டு நெகிழ்ந்தனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனை வளாகத்தில், 103 வருடங்களு க்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த கௌரவ மாஜிஸ்டிரேட் அடைக்கப்ப செட்டி யாரின் மகள் உமையாள் ஆச்சி என்ப வர், மகப்பேறு வார்டினை பட்டுக் கோட்டை பகுதி மக்களின் பயன் பாட்டிற்காக நன்கொடையாக கட்டிக்கொடுத்துள்ளார். 03.06.1920-ஆம் தேதியுடன் கூடிய அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டு, இந்த கட்டிடத்தில் பதிக்கப்பட்டுள் ளது. அதில், அப்போதைய ஒருங்கி ணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய ரும், டிஸ்ட்ரிக்ட் போர்டு தலைவரு மான பி.சி.டட் (ஐ.சி.எஸ்) இந்த சேவையை பாராட்டியுள்ளார். பள்ளத்தூர் அடைக்கப்ப செட்டி யார் வாரிசுகளை கண்டுபிடித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பட்டுக்கோட்டை சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற சுகாதாரப்பணிகள் துறை யைச் சேர்ந்தவருமான வ.விவே கானந்தம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்த பழை மையான கல்வெட்டினை படம் எடுத்து வாட்ஸ் அப் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தார்.
வாட்ஸ்அப்பில் இதனை பார்த்த உமையாள் ஆச்சியின் சந்ததிகள் விவேகானந்தனை தொடர்பு கொண்டு பேசினார்கள். இதனை தொடர்ந்து இவர்களுக்கு நன்றி தெரிவிப்ப தற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அ.அன்பழகன், உமையாள் ஆச்சியின் சந்ததியினரை தொடர்பு கொண்டு பட்டுக்கோட்டைக்கு வரு மாறு அழைப்பு விடுத்தார். அழைப்பினை ஏற்றுக்கொண்ட உமையாள் ஆச்சியின் சகோதரர் மகன் எம்.ஆர்.லெட்சுமணன் மற்றும் பேரன்கள் எம்.ஏ.அடைக்கப்பன், எம்.ஏ.கதிரேசன் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இவர்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அ.அன்பழகன், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பி.சீனிவாசன், முடநீக்கியல் சிறப்பு மருத்துவர் சி.கலைச்செல்வன், தலைமை மருந்தாளுநர் நெடுஞ்செழியன், ரத்த வங்கி ஆய்வுக்கூட நுட்பனர் சி.கலைச்செல்வன், செவிலியர் கண்காணிப்பாளர் இந்திராணி, சமூக ஆர்வலர் விவேகானந்தம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். நிறைவாக உமையாள் ஆச்சி குடும்பத்தினர் கூறுகையில், ‘‘பட்டுக்கோட்டையில் எங்கள் முன் னோர்கள் செய்த தர்ம காரியத்தை நினைத்து பெருமைப்படுகிறோம்’’ என நெகிழ்ச்சியுடன் கூறினர்.