ஜூலை 13 -அன்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, 20 வயது தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த இளைஞன் சுட்டுக் கொல்ல முயற்சித்தான். துப்பாக்கி குண்டு டிரம்பின் காதிலே பட்டு, சற்று கிழித்து, ரத்தம் முகத்திலே வழிந்தது. பாதுகாவலர்கள் உடனடியாக டிரம்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .நூலிழையில் உயிர் தப்பினார் டிரம்ப் கையை உயர்த்தி ,கூட்டத்தினரை பார்த்து, ‘போராடுங்கள்’ எனக் கூறிவிட்டு சென்றார். அதிர்ச்சி அளிக்கும் இச்சம்பவம், உடனடியாக தேசிய ,சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. இந்த அரசியல் வன்முறை சம்பவம் டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க உதவியது. ஜோ பைடனின் ஜனநாயக கட்சி, ‘ஜனநாயக விரோதி டிரம்ப்’ என்று தனது வழக்கமான பிரச்சாரத்தை செய்வதை நிறுத்திக் கொண்டது. டிரம்ப் தன்னுடன் உதவி ஜனாதிபதிக்கு போட்டியிட ஜே.டி. வான்சே என்பவரை முன்னிறுத்தியுள்ளார். பைடனின் பேச்சுக்கள் தான் டிரம்ப் சுடப்பட்டதற்கு காரணம் என வான்சே குற்றம் சாட்டினார். வன்முறையை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜனநாயக கட்சி கூறுவது மேலோட்டமானது. டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, பைடனின் ஜனநாயக கட்சி பிரபலங்கள் ,டிரம்ப் மீது அனுதாபம் தெரிவித்து ,விரைவில் குணமடைய வாழ்த்தினர். கார்ப்பரேட் தலைவர்களும் டிரம்பிற்கு ஆறுதலாக அறிக்கைகளை விட்டார்கள்.
உண்மையில் டிரம்ப்க்கென நிலையான சித்தாந்தம் கிடையாது. தனது பெயரையும், புகழையும் காப்பது தான் அவரது குறிக்கோள். டிரம்ப் மீதான கிரிமினல் வழக்குகள் தற்போது வாபஸ் பெறப்படுகின்றன. இந்தப்பின்னணியில், அமெரிக்காவின் ஆளும் வர்க்கங்கள் இப்போதே டிரம்ப் ஜனாதிபதி ஆகிவிட்டார் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன. இத்தகைய வன்முறைகளுக்கு அமெரிக்காவில் இடமில்லை என ஜோ பைடன் தற்போது கூறுகிறார். ஆனால் காசாவில் பாலஸ்தீனர்களை, இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொத்துக்கொத்தாக கொன்று வருவதை கண்டும், காணாமல் இருக்கிறார். அமெரிக்க வரலாறு முழுவதும், தொழிலாளி வர்க்கத் தலைவர்களும், சமூக இயக்க தலைவர்களும் வன்முறைகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். ஒரு சிறு பகாசுர உயர் பணக்கார வர்க்கம், கடந்த நான்காண்டுகளில் தங்களது லாபத்தை இரட்டிப்பாக்கி கொண்டுள்ளது. வாடகை உயர்வு, தேக்க நிலையிலே உள்ள ஊதியம், பழுதடைந்த பள்ளிகள், குழந்தைகளை பராமரிக்க கூடுதல் செலவு ,ஒட்டுண்ணிகளாக செயல்படும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் போன்ற பல பிரச்சனைகளை அமெரிக்க மக்கள் சந்திக்கிறார்கள். மக்கள் செலுத்தும் வரிப்பணம், யுத்தங்களுக்கு செலவிடக்கூடாது என அமெரிக்க மக்கள் விரும்புகின்றனர். முதலாளி வர்க்கத்தின் பொதுவான நலன்களை காப்பதில், இரண்டு கட்சிகளும் ஒருமித்து செயல்படுகின்றன. வால் ஸ்ட்ரீட் மற்றும் ராணுவத் தொழில் முதலாளிகளின் அதிகாரம் தகர்க்கப்பட வேண்டும். நாட்டின் செல்வ வளம் வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புக்கு செலவிடப்பட வேண்டும் என்பதே அமெரிக்க மக்களின் விருப்பம். ஆனால், 150 ஆண்டுகளாக ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என்ற இரு கட்சிகளும் மக்களுக்கு துரோகமே இழைத்து வருகின்றன.
எரிகிறது வங்கதேசம்
1971 இல் வங்கதே சத்தில் விடு தலைப் போர் நடத்தி வெற்றி கண்டவர், ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவர் 1972ல் அரசு வேலைகளில், 30 % இடங்களை விடுதலைப் போரில் ஈடுபட்டோர் வாரிசுகளுக்கு, குழந்தைகள், பேரன், பேத்திகளுக்கு ஒதுக்கீடு செய்தார். பத்து சதவீதம் பெண்க ளுக்கும், 10% பின்தங்கிய மாவட் டங்களை சேர்ந்தவருக்கும், 5% சிறு பான்மை இனத்தினருக்கும், 1% மாற்றுத்திறனாளிகளுக்கும், இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதி 44% இடங்கள் திறமை அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டது. இது நீண்டகாலமாக அமலில் உள்ள நிலையில், வேலையின்மை தீவிரம் அடைந்து வருவது, சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 ஆயிரம் இடங்களுக்கு நாலு லட்சம் பட்டதாரிகள் போட்டியிடும் நிலைமை உருவானது .2018 ஏப்ர லில் துவங்கி இட ஒதுக்கீடு 10% மட்டுமே இருக்க வேண்டும் என நான்கு மாதங்கள் மாணவர்களும், ஆசிரியர்களும் போராடினர் .இதை யொட்டி எழுந்த வன்முறைகளால் பலர் காயமுற்றனர். சர்வதேச ரீதியா கவும் வங்கதேச கோட்டா முறைக்கு எதிர்ப்பு வந்த பின்னணியில், 2018ல் பிரதமர் ஷேக் ஹசீனா அனைத்து கோட்டாக்களையும் ரத்து செய்தார். இந்நிலையில், 2024 ஜூன் 5-ல் உயர்நீதிமன்றம் 30 சதவீத இட ஒதுக்கீடு உட்பட அனைத்து இட ஒதுக்கீடுகளையும் நடைமுறைப் படுத்த வேண்டும் என உத்தரவிட் டது. கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பல வாரங்களாக இட ஒதுக்கீடு பிரச்ச னை மீது போராடி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மை இனத்தினர் போன்ற நலிவுற்ற பிரிவினருக்கு மட்டும் அரசுப் பணி களில் இட ஒதுக்கீடு அமலாக்க வேண்டும்; 30 சதவீதம் விடுதலைப் போராட்ட சந்ததியினருக்கு ஒதுக்கீடு கூடாது என்பதே மாணவர்கள் கோரிக்கை. இது தற்போது வன்முறையாக மாறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்கா மல், நீதிமன்ற உத்தரவுகளை அமலாக்குவேன் என ஷேக் ஹசீனா அடம் பிடிக்கிறார். விடுதலைப் போராளிகளின் சந்ததியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், 1971 இல் பாகிஸ்தா னுக்கு ஆதரவாக இருந்த ரசாக்கர்கள் போன்றவர்கள் என அவர் கூறியது, மாணவர்கள் மத்தி யில் கடும் கோபத்தை உருவாக்கி யுள்ளது. ஜூலை 16-ல் போராடிய மாண வர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அரசு வன்முறையை ஏவியது. பெருமளவில் வன்முறைகளும் வெடித்ததால், அனைத்து பள்ளி கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. தங்கும் விடுதிகளை காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டது. மாணவர்கள் இதை மறுத்து, தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனர்.