சென்னை, ஜன. 27- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொள்வது கட்டாயமில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட் ்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப். 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும்என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்தார். மேலும், தேர்தலின் போது பிண்பற்ற வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு நெரிமுறைகளை தேர்தல் ஆணை யம் வெளியிட்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 1.33 லட்சம் பேர் ஈடுபட விருக்கும் நிலையில், தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திகொள்வது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. மேலும் 2ஆவது தவணை செலுத்தி, 9 மாதங்கள் கழித்து கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.