tamilnadu

img

மதுரை: மண்சரிவில் சிக்கிய தொழிலாளியின் உடல் மீட்பு

மதுரை கூடல் நகர் பகுதியில் அசோக் நகர் மூன்றாவது தெருவில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.  அவரது உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இதையடுத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் மண்டல தலைவர்கள் அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணி ஆய்வு செய்தனர். தொடர்ச்சியாக 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.