உலகைக் காக்கும் மார்க்சியத்தை அவதூறு செய்வதா?
சென்னை, பிப்.23- மார்க்சியம் குறித்து அத்தூறாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் வியாழனன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றதிலிருந்து மாநில அரசையும் ஜனநாயக இயக்கங்களை யும் எதிர்த்துப் பேசி வருகிறார். அர சமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து குதறிக் கொண்டிருக்கும் அவர் மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆளு நர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சி யத்தையும் சாடினார். ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டெடுக் கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்ப தன் மூலம் ஆளுநர் ரவி தனக்கு தானே எதிர்ப்பை உருவாக்கிக்கொண்டார். மார்க்சியம் குறித்து அவதூறாகப் பேசி யதற்கு வருத்தம் தெரிவிக்க வலி யுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரி விக்கப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இந்நிலையில் புதனன்று (பிப்.22) சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் வியாழக்கிழ மை காலை சிதம்பரம் கோவிலுக்குச் சென்றார். பின்னர் நந்தனார் மடத்திற்குச் செல்லும் போது தெற்கு வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்தலைவர் மூசா, கட்சியின் சிதம்பரம் நகரச் செய லாளர் ராஜா தலைமையில் திரண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரி வித்தனர்.
ஆளுநரைக் கண்டித்து முழக்க மிட்ட அவர்கள், ஆளுநரா? ஆர்எஸ்எஸ் இன் கைக்கூலியா? எனக் கேள்வி எழுப்பினர். காவல்துறையினர் சுற்றி வளைத்ததால் ஆர்ப்பாட்டம் மறியல் போராட்டமாக மாறியது. உடனே காவல் துறையினர் அனை வரையும் கைது செய்தனர்.
கடலூர்
சென்னைக்குச் சாலை மார்க்கமாக ஆளுநர் திரும்பினார். அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் அருகே காவல்துறை துணை கண் காணிப்பாளர் கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். காவல் துறையின் தடுப்பையும் மீறி ஏராள மான கட்சித்தொண்டர்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநர் ரவியைக் கண்டித்து கோஷம் எழுப்பியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவுடன் திடீ ரென்று அனைவரையும் காவல்துறை யினர் குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆளுநரின் அடாவடித் தனத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள சுங்கச்சாவடி அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரி விக்க இருந்த நிலையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்குத் திரண்டு வந்து ஆளுநர் அடாவடி பேச்சைக் கண்டித்து முழக்கமிட்ட கட்சியின் வட்டச் செய லாளர் வழக்கறிஞர் எம்.கே. முருகன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பால முருகன் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்தனர்.
செங்கல்பட்டு சுங்கச்சாவடி'
விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்து ஆளுநர் வாகனம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நுழைந்தது. இதை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்களும் ஊழியர்களும் பரனூர் சுங்கச்சாவடியில் கறுப்புக் கொடியுடன் திரண்டனர். மாவட்டச் செய லாளர் ப.சு.பாரதி அண்ணா தலைமை யில் ஆளுநருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டபோது செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் பரத் தலைமையில் காவலர்கள் அனை வரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ. சங்கர், கே.சேஷாத்திரி, கே.வாசு தேவன், வி.அரிகிருஷ்ணன், க.புரு ஷோத்தமன், செங்கல்பட்டு வட்டச் செயலாளர் கே.வேலன், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் அறிவித்துள்ள தால் அவர் செல்லும் இடமெல்லாம் காவல்துறையினர் கூடுதலாக குவிக்கப்படுகிறார்கள். ஆளுநர் வரு கையால் திண்டிவனம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக் கிழமை காலை முதலே காவல்துறை யினர் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்பவர் களை தடுத்து நிறுத்தி பரிசோதனை செய்தனர்.