கோவை, மார்ச் 21- தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி செய்த குற்றச் சாட்டில், பாஜக எம்பியும், பிர பல மலையாள நடிகருமான சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபியை கோவை யில் குற்றப்பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை யினர் கூறுகையில், கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிரி தரன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றிய விபரமாவது; கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில் கோபி கடந்த 2021 நவம்பர் 19 ஆம் தேதி கோவை மதுக்கரை அருகேயுள்ள மாவுத்தம் பதி பகுதி யில் 4.25 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ள தாக தெரிவித்தார். பிரபல நடிகரின் சகோதரர் என்பதால் கிரிதரனும் நிலத்தை வாங்க ஒப்புக் கொண்டார். இதனையடுத்து சுனில் கோபி மற்றும் அவரது உறவினர் ரீனா, அவரது கணவர் சிவதாஸ் ஆகியோரது வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.97 லட்சம் அனுப்பியுள்ளார். இந்நிலை யில், நிலத்தின் வில்லங்கச்சான்றை சரிபார்த்த போது, அதில் நிலம் தொடர்பாக ஏற்கெனவே ஒரு சிவில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கிரிதரன் சுனிலிடம் கேட்டபோது பணத்தை கொடுக்காமல் மழுப்பலாக பதிலளித்துள் ளார். இதனைத்தொடர்ந்து மேலும் பணத்தை பெறு வதற்கு முயற்சிக்கவே பிப்.20 ஆம் தேதியன்று பணத்தைக் கேட்டபோது கிரிதரனுக்கு சுனில் கோபிகொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர், கேரள மாநிலம், கோழிக்கோடு விரைந்து அங்கு தலைமறைவாக இருந்த சுனில் கோபியை சனிக்கிழமை இரவு கைது செய்தனர். இதையடுத்து கோவை அழைத்து வரப்பட்ட அவர், ஞாயிறன்று கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி மலை யாள நடிகரும், பாஜகவின் எம்பியுமான சுரேஷ் கோபியின் இளைய சகோதரர் என்பது தெரிவந்துள்ளது. மேலும், தனது சகோதரர் பாஜகவின் எம்பி பதவியில் உள்ளதால், இதனை சாதகமாகப் பயன்படுத்தி பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.