tamilnadu

img

அதிபர் ஆட்சியை கொண்டுவர பாஜக முயல்கிறது: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை,ஜன.18- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்தத் தலைவர் பா. ஜீவானந்தம் 60 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை, காசிமேட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் மூத்தத் தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  முத்தரசன்,“ தமிழகம் நன்கு அறிந்த ஒரு  தலைவர் ஜீவானந்தம், மிகப்பெரிய புரட்சி யாளராகவும் நாட்டின் விடுதலைக்காகவும் போராடி பல ஆண்டுகள் சிறை தண்டனை களை அனுபவித்தார்”என்றார். தந்தை பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரத் தையும் செய்தவர் என்றும் தனது வாழ்நாள்  முழுவதும் நாட்டிற்காகவும் மக்களுக்காக வும் பணியாற்றினார் என்றும் அவர் கூறி னர். நாட்டில் வகுப்புவாதம் தலை தூக்கி நிற்கிறது நாட்டையே தலைகீழாக திருப்ப முயற்சி நடந்து கொண்டிருக்கிறது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்று மதத்தின் பெயரால்  கடவுளின் பெயரால் நாட்டு மக்களை பிளவு  படுத்தி தங்களது சுயநலக் கொள்கையை பயன்படுத்தி மக்களை பிரிக்க நினைக்கின்றனர்.  ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் இந்தியா வில் அதிபர் ஆட்சியை கொண்டு வர  பாஜக முயலுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை  அதிமுக ஆதரிப்பதில் ஆச்சரியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.