மணிப்பூரில் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய முடியாமல் திணறும் பாஜக
மூத்த அமைச்சர் அசாமிற்கு ஓட்டம்
வன்முறை தூண்டுதல் புகார், உச்சநீதிமன்ற விசாரணை, சட்ட மன்ற கூட்டத்தொடரை கூட்ட பயம் உள்ளிட்ட நெருக்கடிகளால் மணிப்பூர் பாஜக முதலமைச்சர் பைரேன் சிங், அமித் ஷாவிடம் கூறிவிட்டு ஞாயிற் றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். பைரேன் சிங்கின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா, புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் வரை இடைக்கால பொறுப்பில் பணியாற்றுமாறு பைரேன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்தார்.
ஆட்கள் இல்லை...
பைரேன் சிங் ராஜினாமா செய்து 4 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய முடி யாமல் பாஜக திணறிய வருகிறது. பைரேன் சிங்கிற்கு அடுத்து பெரிய தலை வராக கருதப்படும் மாநில வனத்துறை அமைச்சர் பிஸ்வஜித், மணிப்பூரின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப் படலாம் என்றும், பாஜக தேசிய மேலிடம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதா கவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தி வெளியான பின்பு, தனக்கு முத லமைச்சர் பதவி வேண்டாம் என்பதை கூறும் வகையில் புதன்கிழமை மாலை பிஸ்வஜித் அசாம் மாநிலம் கவு காத்திக்கு ஓட்டம் பிடித்தார்.
மோடி அரசுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பத்மஸ்ரீ விருதில் ஆள்மாறாட்டம்
கடந்த 2023ஆம் ஆண்டு 106 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இந்த விருது பெற்றவர்கள் பட்டியலில் இலக்கியம், கல்வி பங்களிப்புக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீ அந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயர் பத்மஸ்ரீ விருதுக்காக 56ஆவது இடத்தில் இடம் பெற்றது. அவர் தில்லிக்கு சென்று ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இதற்கிடையே ஒடியா மொழி இலக்கியவாதியும், டாக்டருமான அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் புவ னேஸ்வர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சம்பந்தப்பட்ட இருவருக்கும், ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்.