tamilnadu

img

தில்லியில் மதராசி கேம்ப் குடியிருப்பை இடித்துத் தரைமட்டமாக்கிய பாஜக அரசு!

தில்லியில் மதராசி கேம்ப் குடியிருப்பை இடித்துத் தரைமட்டமாக்கிய பாஜக அரசு!

ஜங்புராவில் 700-க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தவிப்பு

புதுதில்லி, ஜூன் 1 - தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்ப் குடியிருப்புகளை, ஆளும் பாஜக அரசானது, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது.  இதனால், ஒரே இரவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், தங்களின் வசிப்பிடத்தை இழந்து, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நிர்க்கதியான நிலையில் வீதியில் தள்ளப் பட்டுள்ளனர்.  தில்லி ஜங்புரா பகுதியின் மதராசி குடியிருப்பில் இருக்கும் தமிழர்களின் வீடுகளை இடித்து மக்களை வெளியேற்ற ஆளும் பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த பகுதியில் 700-க்கும் மேலான தமிழ்க் குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், அவர்கள் பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும், இடிப்புத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்களின் தலைமையில் போராட்டங்களை நடத்தி வந்தனர். இப்பிரச்சனை நீதிமன்றத்திற்கும் சென்றது. அப்போது, தகுதியான குடியிருப்பாளர்களுக்கு முறையான மறுவாழ்வு ஏற்பாட்டை உறுதி செய்யுமாறு, தில்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) மற்றும் தில்லி நகர்ப்புற தங்குமிடம்