tamilnadu

img

செங்கோலை வைத்து பாஜக அரசியல் பண்ண முடியாது - கே.பாலகிருஷ்ணன் பேச்சு

கும்பகோணம், ஜூன் 24- ராஜாஜியும் மவுண்ட்பேட்டனும் ஊரில் இல்லாத நேரத்தில் அன்பளிப்பாக கொடுத்த செங்கோலை வைத்து பாஜக அரசியல் பண்ண முடியாது என்று தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி யளிப்பு பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் நடை பெற்றது. பொதுக் கூட்டத்திற்கு மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தோழர் என்.சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.4.25  லட்சம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ண னிடம் வழங்கப்பட்டது. முன்னதாக தியாகி என்.வி.குழுவினரின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன் நன்றி  கூறினார். மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ‘மதவெறி அரசியலும் சோழர் களின் செங்கோலும்’ என்ற தலைப்பில் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதா வது:

நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற கட்ட டத் திறப்பு விழா அல்ல. ஆட்சி மாற்றத்திற் கான அறிகுறி என நாங்கள் சொல்கிறோம். நாடா ளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் போது, மடா திபதிகளின் கூட்டம், சோழர்களின் செங்  கோல் வழங்கப்பட்டதாக நாவலாசிரியர்களை மிஞ்சும் அளவிற்கு, மர்மக் கதைகளை சொல்லி வருகிறார்கள். விட்டால், இவர்கள் தான் சோழர்  களின் வாரிசு என்று சொன்னாலும் சொல்வார்  கள். சோழர்களின் வரலாறு பற்றி இவர்களுக்கு தெரியுமா? சோழர் காலத்தில், நில அளவு மற்றும் உரிமை ஆவணங்களை வகுக்கும் திட்டங்களை உருவாக்கி இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் பொது மக்களை அச்சு றுத்தும் வகையில் 17 வகையான வரிகளை விதித்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியவர் சோழர்கள். இதை கே.கே.பிள்ளை என்பவர் ஆவணங்களாக பதிவிட்டுள்ளார். மேலும் செங்கோலை கொடுப்பதற்கு திரு வாடுதுறை ஆதீனம் என்ன சோழர்களின் வாரிசா? 1947-இல் உண்மையில் நேருவிடம்  கொடுக்கப்பட்ட செங்கோல் படம் வெளி யாகி உள்ளது. இரவு 10 மணிக்கு  நேரு அவர்  களின் வீட்டில் சாதாரண உடையுடன் நெற்றி யில் திருநீர் பட்டையுடன் அன்பளிப்பாக கொடுத்த செங்கோலை பெற்றுக்கொண்ட படம் தான் உள்ளது. அதை அவர் வழக்கம் போல் அருங்காட்சியகத்தில் வைத்தார்.

இதில் ஆட்சி மாற்றத்தின் போது கொடுக்கப்  பட்ட படங்களோ ஆவணங்களோ ஏதும் இல்லை. அப்போது மவுண்ட்பேட்டன் பாகிஸ்  தானிலும் ராஜாஜி கல்கத்தாவிலும் இருந்தார்.  இதனை ஒரு கதையாக சொல்லி பாஜக அரசி யல் நடத்துகிறது. சுதந்திரம் கொடுக்கும் பொழுது, ஆங்கிலேய ஆட்சியின் யூனி யன் ஜாக் கொடி இறக்கப்பட்டு நமது மூவர்ணக்  கொடி ஏற்றப்பட்டது. அதுதான் உண்மை. இதையெல்லாம் மறைத்துவிட்டு செங்கோலை வைத்து அரசியல் நடத்துகிறது பாஜக. இந்த ஆட்சியை முற்றிலுமாக அப்புறப்படுத்தத் தான்  இந்தியாவில் உள்ள 17 எதிர்க்கட்சிகள் பாட்னா வில் கூடின. அடுத்த மாதம் காஷ்மீரிலும், தேவைப்பட்டால் தமிழ்நாட்டிலும் இது கூடி  முற்றிலுமாக பாஜக அரசு அப்புறப்படுத்தப் படும் என தெரிவித்தார். பாஜக ஆட்சி நடத்திய இந்த 9 ஆண்டுகளில் எங்கும் ஊழலே நடைபெறவில்லையா? 95  சதவீதம் எதிர்க்கட்சிகள் மீது ஊழல் குற்றச் சாட்டுகளை சொல்லி வழக்கு போட்டு வரு கிறார்கள். தற்போது அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் பாஜகவின் இளை ஞர் அணிகளாக செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. ஒன்பது ஆண்டுகளில் ரூ.11.40 லட்சம் கோடி  கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது. இதனை தான் வளர்ச்சி என்கிறார்கள். அதானிக்கும் அம்பானிக்கும் தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் எப்படி வளர்ச்சி அடையும். தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கும் திட்டத்தில் தற்போது 500 கடைகளை மூடி இருப்பது வரவேற்கத் தக்கது. ஆனாலும் விற்பனை அதிகமாக நடக்கும் இடத்தில் மதுபான கடைகளை மூட  வேண்டும். ஏனென்றால் அங்கு தான் மது பிரி யர்கள் அதிகமாக வருவார்கள். மேலும் பள்ளி  கல்லூரிகள் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.