“தமிழ்நாடு அனைத்து நிலையிலும் முன்னேறிய மாநிலமாக, தன்னிறைவு பெற்ற மாநில மாக மலரவேண்டும். அனை த்து மாநில ஆட்சி மொழிக ளும் உயர்ந்திருக்க வேண்டும். அனைவரின் குர லுக்கும் மதிப்பும் மரியாதை யும் இருக்க வேண்டும். கூட் டாட்சி கருத்தியலை உள்ள டக்கிய இந்தியாவை அமைப்பதற்காகத்தான் கூட்டணியை அமைத்துள்ளோம். இது அரசியல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி. தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்க வில்லை. அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப்போகும் ஆட்சிக்கு உருவாக்க வேண்டிய கொள்கையை மனதில் வைத்து செயல்படுகிறோம். தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூகநீதி உரிமை, இனம், மொழி உரிமை, மாநில சுயாட்சி உரிமை என அனைத்தையும் மீட்போம். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற மக்களாட்சி உரிமைகளுக்கு கேடு விளை விக்க பார்க்கிறார்கள் பாஜகவினர். மக்கள் தொகை குறைந்துவிட்டது எனக் கூறி நாடாளுமன்ற தொகுதிகளை குறைக் கின்ற சதியை அரங்கேற்றப் பார்க்கி றார்கள். குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை முறையாக செயல்படுத்திய தமிழ கத்துக்கு தண்டனையாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப் பார்க்கிறார்கள். 39 எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்கள் என்றால் நமது உரி மையை நிலைநாட்டவும், எடுத்துச்சொல்லவும் செல்கிறார்கள். மகளி ருக்கான இடஒதுக்கீடு 33 சதவீதத்தை அறிவித் தார்கள். அந்த அறி விப்பை பாஜக முழு மையாக கொண்டு வந்துள் ளதா? இதர பிற்படுத்தப் பட்ட மகளிர் இடஒதுக் கீட்டை வழங்க மறுப்பது பாஜகவின் உயர் வகுப்பு பிற்போக்கு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலிசெய்ய போகிற ஆபத்தும் இருக்கிறது” என்றார்.
தஞ்சாவூரில் திராவிட கழகம் நடத்திய முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.
முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்ற பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி வழங்கினார். ‘தாய் வீட்டில் கலைஞர்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பர்அலி, பாலபிரஜாபதி அடிகளார், மேற்குவங்க முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.பாலசந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், ஆ.ராசா, செ.ராமலிங்கம், எஸ்.கல்யாணசுந்தரம் எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.