tamilnadu

img

பறவைகள் பூங்கா நுழைவு கட்டணத்தை குறைக்க வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சேதுபதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  தமிழகத்தின் மைய மாவட்டம் திருச்சி. இந்த மாநகரத்தை அழகுப்படுத்தவும் தரம் உயர்த்தவும் பெரும் பங்காற்றுகின்ற தங்களையும், உங்களது சேவைகளையும் வாலிபர் சங்கம் ஆதரிக்கின்றோம். இந்நிலையில் திருச்சி கம்பரசம்பேட்டையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பறவைகள் பூங்கா சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுலா பயணிகளிடம், பறவைகள் பூங்கா தொடர்பாக வாலிபர் சங்கம் ஆய்வு செய்ததில் பெரும்பான்மை மக்கள் நுழைவு கட்டணம் அதிகமாக உள்ளது என கூறினர்.  மேலும், பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணத்தை குறைக்க வேண்டுகோள் விடுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, வாலிபர் சங்கம் பெரியவருக்கு ரூ.100, சிறியருக்கு ரூ.50 என நுழைவு கட்டணத்தை குறைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்தபோது, வாலிபர் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.