“வேளாண்யுத்திகள்” என்ற தலைப்பில் மகளிர் சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கத்துறை இணை பேராசிரியரும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப மைய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் தி.ராஜ்பிரவின் எழுதிய சிறப்பு கட்டுரைகளுக்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற 7 ஆவது வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தீக்கதிர், உழவன் உரிமை, மகளிர் சிந்தனை உள்ளிட்ட இடதுசாரி இதழ்களில் வேளாண் சார்ந்த கட்டுரைகள், உயர்கல்வி, வணிகம் சார்ந்த கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதி வரும் இவர், தீக்கதிரில் ‘வேளாண் நிலம்’ என்ற தொடருக்கு கடந்த முறை கோவையில் நடந்த மாநாட்டில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.