புதுச்சேரி,நவ.19- புதுச்சேரியில் உயர்நீதி மன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச மாநாட்டிற்கு தட்சணா மூர்த்தி தலைமை தாங்கி னார். வழக்கறிஞர் வி.ஆர்.சரவணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். புதுச்சேரி வழக் கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எம்.குமரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் அணி தலைவர் கார்த்திகேயன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் விழுப்புர மாவட்டத் தலைவர் முருகன், துணைத் தலைவர் சங்கரன், மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.டி.சங்கர், ஏ.கே.ஆனந்து ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து தமிழ் மாநில துணைத் தலைவர் கே.இளங் கோ பேசினார். திரளான இளம் வழக்கறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். நிர்வாகிகள் சங்கத்தின் புதுச்சேரி பிர தேசத் தலைவராக மூத்த வழக்க றிஞர் ஆர்.டி.சங்கர், செயலா ளராக வி.ஆர்.சரவணன், பொரு ளாளராக எம்.தட்சணாமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். புதுச்சேரியில் உயர்நீதி மன்றக் கிளையை அமைக்க வேண்டும். வழக்கறிஞர் சேம நலநிதி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். சென்னை, மதுரை யில் உள்ளதை போல் வழக்க றிஞர்களுக்கு புதுச்சேரி நீதி மன்றத்தில் தனிஅறைகள் கட்டிக்கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் னங்கள் நிறைவேற்றப்பட்டன.