ஊட்டி, மே 31- படுகர் சமுதாயத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கேத்தி கிராமத்திலுள்ள அச்சனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத். இவரது மனைவி மாலதி. இவர்களது மகள் மீரா (23). ரவீந்திரநாத் ராணுவ மருத்துவமனையில் தொழில்நுட்ப நிபுணராக நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை மட்டு மின்றி நாட்டின் பல்வேறு ராணுவ மருத்துவமனைகளில் பணி யாற்றியுள்ளார். இதன் காரணமாக இவரது மகள் மீராவை தனது பணி மாறு தல் செல்லும் ஊர்களுக்கு எல்லாம் அழைத்துச்சென்று அங்குள்ள கேந்திரிய வித்யா லயா பள்ளிகளிலேயே படிக்க வைத்துள்ளார். இவர் கோவை யில் பணிபுரிந்தபோது தனது மகள் மீராவை அங்குள்ள தனி யார் பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்தார்.
இந்நிலையில், மீராவுக்கு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக அவர் கடந்த ஆண்டு நடந்த ஒருங்கிணைந்த ராணுவப் பணிகளுக்கான தேர்வு எழுதி யுள்ளார். அதில் மீரா கப்பல் படைக்கான பிரிவில் தேர்ச்சி பெற்றார். இதைத் தொடர்ந்து, மீராவுக்கு கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள எஜி மாலா கப்பல் படைத் தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 6 மாதம் பயிற்சியில் பங்கேற்றார். பயிற்சிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் மீரா விரைவில் கப்பல் படைக்கு அதிகாரியாக பணியில் சேர உள்ளார். பயிற்சியை முடித்த அவர், தனது பெற்றோருடன், தனது சொந்த ஊரான நீலகிரியில் உள்ள அச்சனக்கல்லுக்கு வந்தார். அங்கு அவருக்கு அந்த ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு சார்பில் இவ ருக்கு பாராட்டு விழா நடந்தது. இதுகுறித்து மீரா கூறியதா வது:- எனது தந்தை ராணுவத்தில், பணியாற்றியதால் எனக்கும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே இருந் தது. அதற்கேற்ப கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தியை முதன்மையான மொழி யாக கொண்டு படித்ததால் எனக்கான பயிற்சிகள் எளிமை யானது. தற்போது கண்ணூரில் உள்ள தேசிய கப்பல்படை பயிற்சி மையத்தில் 6 மாத பயிற் சியை முடித்துள்ளேன். இதை தொடர்ந்து சப்-லெப்டினென்ட் என்ற கப்பல் படை அதிகாரி பதவி வழங்கப்பட்டு கொச்சியில் உள்ள கப்பல்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். ராணுவ பணி என்றாலே அதில் பெண்களுக்கு அதிகள வில் விருப்பம் இருக்காது என்ற நிலையில், படுகர் சமுதா யத்தில் இருந்து கப்பல் படையில் அதிகாரியாக தேர்வு செய்யப் பட்டுள்ள மீராவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரு கிறார்கள்.