tamilnadu

img

மீண்டும் மயிலாடுதுறைக்கே கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம்

‘தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி’ என மகிழ்ச்சி

மயிலாடுதுறை பயிற்சி மையத்தில் தங்கி பயின்று வரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஹர்சிதா மற்றும் அவரது பெற்றோர்  கார்த்திக், சோபியா ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  “பயிற்சி மையம் வாரணாசிக்கு சென்றால் தங்களது மகளின் எதிர்கால கல்வி மற்றும் விளையாட்டு கனவுகள் என்னவாகும் என்கிற பெரும் கவலையை போக்கும் விதமாக  தமிழக மாணவர்களுக்கு குறுகிய காலத்தில் பயிற்சி மையத்தை மீண்டும் பெற்றுத் தந்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக” கூறினர்.  நேரில் சந்தித்த கூடைப்பந்து வீராங்கனை ஹர்சிதா தனது சேமிப்பில் வாங்கிய பரிசினை சு.வெங்கடேசன் எம்.பி. அவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்.

மதுரை,மே 6-  வாரணாசிக்கு மாற்றப்பட்ட கூடைப் பந்து பெண்கள் பயிற்சி மையம், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேச னின் கோரிக்கையாலும் தொடர் வலி யுறுத்தலாலும் மீண்டும் மயிலாடு துறைக்கே மாற்றப்பட்டது. இது, ‘தமிழ கமே கொண்டாட வேண்டிய வெற்றி’  என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள்  கூடைப்பந்து பயிற்சி மையத்தை மயி லாடுதுறையில் இருந்து மாற்றி மாணவி களை வாரணாசி வரை அலைய விடுகிற  வகையில் பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்த ரவை ரத்து செய்ய வேண்டும் என்று  ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்ச ருக்கு கடிதம் மூலம் நான்  11.4.2023 அன்று  வலியுறுத்தியிருந்தேன். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து  மயிலாடுதுறைக்கே போய் பள்ளிக் கல்வியை அதிலும் குறிப்பாக மேல்நிலைக்கல்வி முதலாண்டு பயின்று  வந்த மாணவிகள் எல்லாம் அதிர்ந்து போய் இருந்தனர். உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள வாரணாசிக்கோ  சத் தீஸ்கர் மாநிலத்தின் ராஜ்நன்த்கன் நக ருக்கோ செல்ல வேண்டும் என்ற உத்த ரவு கண்டு திகைத்துப் போயிருந்தனர். விளையாட்டு ஆர்வமும், கல்வியும் ஒரு  சேர கேள்விக்குறியாகுகிற நிலை ஏற் பட்டது.  

குக்கிராமத்தில் பிறந்து இந்திய பெண்  கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக வந்த புஷ்பா பயிற்சி பெற்ற மயிலாடு துறை மையத்திற்கு மீண்டும் அனுமதி  வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசின்  விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தேன்.  இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் என்ற முறை யில் தொடர்ந்து இப்பிரச்சனை குறித்து தலையீடு செய்தேன். வரும் 7 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் மாபெரும் போராட்டம்  நடைபெற இருந்தது. நான்  உள்பட இயக்கத்தோழர்கள் பலரும் அதில் பங்கெடுப்பதாக இருந்தது.  இந்நிலையில்  மகிழ்ச்சியான செய்தி  கிடைத்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் No 518/SAI/OPS/STC  Review/ 2022 -23/ 03.05.2022 அறிவிக்கை யை வெளியிட்டுள்ளது. அதன்படி மயி லாடுதுறை பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெ னவே இருந்த 11 பயிற்சி இடங்களும்  ஒன்று கூட குறையாமல் தரப்பட்டுள்ளது.  எனது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. எனது கடிதத்தின் மீது உரிய நட வடிக்கை எடுத்த ஒன்றிய அமைச்சருக்கு நன்றி.  போராடிப்பெற்ற இந்த வெற்றியை தமிழ்நாட்டின் கூடைப்பந்து வீராங்கனை களுக்கு அர்ப்பணிப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.