tamilnadu

img

சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக ப.பாரதி அண்ணா தேர்வு

செங்கல்பட்டு, ஜன. 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக 100 விழுக்காடு பார்வை மாற்றுத் திற னாளியான ப.பாரதிஅண்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட 23ஆவது  மாநாடு தோழர் டி.லட்சு மணன் நினைவரங்கில் ஜனவரி 10, 11 ஆகிய நாட்களில் செங்கல் பட்டில் நடைபெற்றது. கட்சிக் கொடி யை மாவட்டக்குழு உறுப்பினர் டி. கிருஷ்ணராஜ் ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சேஷா த்திரி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வேலை அறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. மோகனன் வரவு செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். மத்தியக் குழு  உறு ப்பினர் அ.சவுந்தரராசன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக  வரவேற்புக்குழு தலைவர் வி. கணபதி வரவேற்றார். வரவேற்புக் குழு செயலாளர் கே.வேலன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

மாவட்டத்தில் உள்ள ஏரிகுளங்களை தூர் வார வேண்டும், செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், தமிழக அரசு தொழிற் சங்க அங்கீகார சட்டம் இயற்ற வேண்டும், விவசாயத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், செங்கல்பட்டு எச்பிஎல் தடுப்பூசி நிறு வனத்தை உடனடியாக ஒன்றிய அரசு இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்பாக்கம் அணு சக்தி துறையில் ஒப்பந்த ஊழியர் களை நிரந்தரப்படுத்துவதுடன், சுற்றுவட்டார கிராம இளைஞர்களுக்கு 50 விழுக்காடு முன்னுரிமை அளிக்க வேண்டும், பெண்கள்,பெண் குழந்தைகள் மீதானவன்முறைகளை தடுக்க வேண்டும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுக்கவேண்டும், கிரமம்புற மாணவர்கள் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் விளை யாட்டு அரங்கம அமைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

புதிய மாவட்டக்குழு

மாநாட்டில் 27 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. செயலாளராக ப.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப் பினர்களாக எஸ்.கண்ணன், இ. சங்கர், கே.வாசுதேவன், கே.சேஷா த்திரி, வி.அரிகிருஷ்ணன், வி.தமிழரசி, க.புருசோத்தமன், க.பகத்சிங்தாஸ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.