திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாசில்தார் சுகந்தி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, பள்ளி தலைமையாசிரியர் ஜேசுதாசன், காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.