விருதுநகர், மே.8- தமிழக அரசு, அனைத்து ஆட்டோ தொழி லாளர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். உடனடியாக ஆட்டோக்களை இயக்க அனு மதி வேண்டுமென வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் பி.என்.தேவா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.வேலுச்சாமி, ஏ.ராமர், மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின நகர் செய லாளர் எல்.முருகன் உட்பட பலர் பங்கேற்ற னர். மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், இராஜ பாளையம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பத்து க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் திரளாக ஆட்டோ தொழி லாளர்கள் பங்கேற்றனர்.