tamilnadu

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கம் வசூலிக்கத் தடை

மதுரை, பிப். 27- மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இம்மானுவேல், மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக  பொதுநல மனுக்கள் தாக்கல் செய் யப்பட்டன. அவற்றில், “மதுரை உத்தங்குடி யில் இருந்து கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்தச் சாலையில் தற்போது வண்டியூர், சிந்தாமணி, வலை யங்குளம் ஆகிய மூன்று இடங்களில் டோல் கேட் மையம் அமைக்கப்பட்டு,  செயல்படு கின்றன. மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட் டின்கீழ் உள்ள மேலூர் சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என மூன்று டோல்கேட் மையங்கள் பல ஆண்டு களாக செயல்பட்டு வருகின்றன. புதிதாக அமக்கப்பட்ட  மூன்று டோல்கேட் மையங்களில் வாகனங்களிடம் இருந்து 60 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. இது நெடுஞ்சாலை ஆணைய விதிகளுக்கு புறம்பானது.எனவே 27 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று சுங்கக் கட்டண மையம் அமைக்க அனுமதித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். “ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் புதனன்று  நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் விசார ணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில்,” சுங்கச்சாவடியில் அடிப்படை கட்டமைப்பு  வசதிகள் இல்லை” எனத் தெரிவிக்கப் பட்டது. அதற்கு சுங்க வசூல் மையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  நான்கு வாரங்களில் அடிப்படை வச்திகளுக்கான பணிகள் நிறை வடையும் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்ட ணம் வசூலிக்கக்கூடாது. சிந்தாமணி, வலை யங்குளம் சுங்கச்சாவடிகளிலும் வண்டி யூருக்கென நேரடியாகவோ, மறைமுக மாகவோ கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த உத்தரவை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தவும் உத்தரவிட்டு, வழக்கை மார்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;