tamilnadu

img

லக்கிம்பூர் விவசாயிகளின் அஸ்தி வேதாரண்யம் கடலில் கரைக்கப்பட்டது

வேதாரண்யம்.  அக்.28. உத்தரப்பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன்  கார் ஏற்றி படுகொலை செய்த விவசாயிகளின், அஸ்திக்கு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.  முன்னதாக, புதனன்று மாலை  ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் பயணக் குழுவினருடன் அஸ்தி  வேதாரண்யம் வந்தது.  டெல்டா மாவட்டங்களில் பய ணம் மேற்கொண்டு வந்த விவசாயி களின் அஸ்தி வேதாரண்யத்தில் அஞ்சலி செலுத்திய பின் வேதாரண் யம் சன்னதிக் கடலில் கரைக்கப்பட்டது.

;