சென்னை,மார்ச் 21- மேகதாதுவில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா பாசன மாவட்டங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க காவிரி நீரை நம்பியே உள்ளன. ஆனால், 130 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நதி நீர் தாவா நீடித்து வருகிறது. தமிழ்நாட்டி ற்கு உரிய நீரை வழங்காமல் வஞ்சித்து தடுத்து வருகிறது கர்நாடக மாநில அரசு. தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரைப் பெறுவதற்கு மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மறுபுறம், சட்டப் போராட்டத்தையும் நடத்தி காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் காவிரி தண்ணீருக்காக கர்நாடகாவை எதிர்பார்க்க வேண்டிய நிலையில்தான் தமிழக விவசாயிகள் உள்ளனர்.
சட்டத்தை மதிக்காத பாஜக அரசு!
இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லை அருகே மேக தாதுவில் மிக பிரமாண்டமான அணை யை கட்ட கர்நாடக மாநில பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தும் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. இதற் காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்திருக் கிறது. ஒன்றிய அரசு மற்றும் காவிரி நடுவர்மன்றத்தின் அறிவுறுத்தல்களை மீறி கர்நாடக மாநில பாஜக அரசு செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் திங்களன்று (மார்ச் 21) கேள்வி நேரம் முடிந்ததும், மேகதாது வில் கர்நாடக மாநிலம் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவை முன்ன வரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இதுதொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் விவரம்வருமாறு: காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்பமை உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்கா மலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியை பெறா மலும், தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது. ஒன்றிய அரசு கர்நாடகா வின் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்விதமான தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்த இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
ஒன்றிய அரசுக்கு...
காவிரி நதிநீர்ப் பிரச்சனை ஒரு நீண்ட காலப் பிரச்சனையாகும். இதற்குத் தீர்வாக உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்சனை இரு மாநி லங்களின் உணர்வுப் பூர்வமான பிரச்ச னையாகும். ஆதலால் கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படு கையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்கத் திட்ட த்தை, மற்ற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசிற்கு அறி வுறுத்துமாறு ஒன்றிய அரசை இம்மா மன்றம் கேட்டுக்கொள்கிறது.
ஆணையத்துக்கு...
உச்சநீதிமன்றத்தின் 18.5.2018 ஆணையின்படி, அதன் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல் படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணை யம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப் படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவ சாயிகள் நலனைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் இப்பேரவை தனது முழுமை யான ஆதரவை தெரிவித்துக்கொள் கிறது என்று அந்த தீர்மானத்தில் தெரி விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு கொண்டு தீர்மானத்தை ஆதரித்து சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற கட்சித்தலை வர்கள் செல்வபெருந்தகை (காங் கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (சிபிஎம்), ராமச்சந்திரன்(சிபிஐ), சிந்தனைச்செல்வன் (விசிக), சதன் திரு மலைக்குமார் (மதிமுக), நயினார் நாகேந் திரன்(பாஜக) அனைத்து கட்சித் தலைவர் களும் பேசினர். பிறகு, குரல் வாக் கெடுப்பு மூலம் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.