tamilnadu

img

இசைத்தமிழால் அவர் செய்த அருஞ்சாதனை... - சோழ.நாகராஜன்

அந்தச் சின்னஞ்சிறு பாலகனுக்கு அப்போது வயது எட்டுதான் இருக்கும். திண்ணைப்பள்ளியில் நான்காம் வகுப்பைத் தாண்டமுடியவில்லை அவனால். ஆனால், மிக அழகாகப் பாடுகிறான் என்பதே உடனிருப்போரின் வியப்பாக இருக்கும். தான் பிறந்த கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மரத்தடியில் நின்றுகொண்டு வயல் வேலைகளுக்குப் போகிறவர்களின் விருப்பத்திற்காகப் பாடுவதை வழக்கமாக்கிகொண்ட அந்தச் சிறுவனுக்கு மிட்டாய் வாங்கித்தின்னக் காசு கிடைத்தது. அப்படி எளிய மக்களே அந்தப் பிஞ்சுக் குரலுக்கு முதல் ரசிகர்களானார்கள். அதன் தொடர்ச்சியாகக் கோவில்களில் பாடத் தொடங்கி பக்தர்களுக்குப் பரவசமளித்தான் அந்தச் சிறுவன். 

அந்தக் குரலில் ஏதோ காந்தமிருப்ப தாக உணர்ந்த தந்தையார்  அவனை இசை  வகுப்பில் சேர்த்துவிட்டார். இத்தனை சின்ன வயதில் இவ்வளவு இனிய குரலா  என்று வியந்தார் அங்குவந்த நாடகக்காரர்  ஒருவர். உடனே அந்தச் சிறுவனை நாட கக்குழுவில் சேர்த்துவிட முடிவெடுத்தார் அவர். இப்படித்தான் ஒரு மிகப்பெரிய குரல் ஆளுமை இந்தத் தமிழ் மண்ணுக்கு  கலையின் நல்வரமாகக் கிடைத்தார்.  அப்படியான அந்த ஆளுமைதான் தமிழ் நாடகவுலகிலும், திரையுலகிலும் நிக ரற்றுக் கொடிநாட்டிச்சென்ற உச்சஸ்தாயி  பாடகர் டி.ஆர்.மகாலிங்கம். கொஞ்ச காலமே என்றாலும் அவர் பாடிய காலத் தால் அழியாத பாடல்கள் ஏராளம். இன்ற ளவும் கேட்கும்  ரசிகர்களைக் கிரங்கச்  செய்கின்றன அவரது குரலில் உருவான பல பாடல்கள். சிறுவனாக நாடக மேடைகளில் மகா லிங்கத்தின் தனித்துவக் குரலில் வழிந் தோடும் சங்கதிகளிலும் கமகங்களிலும் மனதைப் பறிகொடுத்தார் தற்செயலாக அந்த நாடகங்களில் ஒன்றைக் காண நேர்ந்த அந்நாளின் முன்னணித் திரைப் படத் தயாரிப்பாளரான ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அழகும் குரல் வளமும் பெற்ற அந்தச் சின்னஞ்சிறு மகாலிங்கத்தை அழைத்துக்கொண்டுபோன அவர், தான் உருவாக்கிய “நந்தகுமார்”(1937) படத்தில் நடிக்க வைத்தார். அந்தப் படம்  வெற்றிபெறவில்லை. எதிர்பார்த்த அளவு  வசூலைக் குவிக்கவில்லை. ஆனால், மகா லிங்கத்தின் குரலுக்கு அவரின் முதல்  படத்திலேயே ரசிகர்கள் குவிந்துவிட்டார் கள். மகாலிங்கத்துக்கு “பிரகலாதா” உள்  ளிட்ட படவாய்ப்புகள் தொடர்ந்து வந்தன.  அவர் ஒரு இளம் நாயகனாக முதன்முத லில் நடித்தது “ஸ்ரீவள்ளி” (1945) படத்  தில்தான். அந்தப் படத்தைத் தயாரித்த தும் ஏ.வி.எம்.தான். அப்போது மகா லிங்கத்துக்கு வயது 22. இதில் முரு கனாக நடித்தார் மகாலிங்கம். வள்ளியாக  ருக்மணி தோன்றினார். அந்நாளின் நாடக மேடையின் பிரபல பாடகர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவரளவிற்கு செவ்விசையில் பலவித ஜாலங்களோடு குரலுயர்த்திப் பாட எவராலும் இயலாது  என்ற நிலை நிலவியது. அது சினிமா  பேசத் தொடங்காத சமயம். நாடகமே  முதன்மைக் கலையெனக் கோலோச் சிக்கொண்டிருந்த அந்தப்போதில் கிட்டப்  பாவே நாடக உலகின் ராஜபாடகராகத் திகழ்ந்தார். ஆனாலும் பாவம், சினிமா பேச  ஆரம்பிக்கும் முன்னரே கிட்டப்பா தனது  29 வயதில் மரணத்தைத் தழுவிக்கொண் டார். 

அந்தக் கிட்டப்பா என்ற ஆலம் விருட்  சத்தின் விழுதென, அவரது அதே குரலை  அச்சுப்பிசகாது பிரதிபலித்தார் மகாலிங்  கம். ஆமாம், கிட்டப்பா காலமாகி பல  ஆண்டுகளுக்குப்பின்னர் அவரே உயிர்த்தெழுந்துவந்து மறுபடியும் பாடத்தொடங்கியதுபோல உணர்ந்தார் கள் தமிழிசை ரசிகர்கள். அதனால் எஸ்.ஜி. கிட்டப்பாவின் குரலுக்கு மகாலிங்கம் தான் வாரிசு என்றார்கள் அவர்கள். முன்னர்  வள்ளி திருமணம் நாடகத்தில் கிட்டப்பா பாடியிருந்த “காயாத கானகத்தே…” - என்ற  பாடலையும்,“எல்லோரையும் போல என்னை எண்ணலாகுமோடி” - என்ற பாட லையும் இந்த ஸ்ரீவள்ளியில் டி.ஆர். மகா லிங்கத்தின் குரலில் கேட்ட இசை ஆர்வ லர்களும் ஆய்வாளர்களும் இது உண்மையே என்று உறுதி செய்தார்கள். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் 52  வாரங்கள் ஓடி வசூலை அள்ளித் தந்தது  ஸ்ரீவள்ளி. காரைக்குடியில் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் நிறுவியிருந்த ஏ.வி.எம். ஸடூடி யோவில் உருவாக்கப்பட்ட முதல் படமான  “நாம் இருவர்” (1947) படத்திலும் நாயகன் டி.ஆர்.மகாலிங்கம்தான். அது விடு தலைப்போராட்டம் உச்சத்திலிருந்த சூழல். நாம் இருவரில் மகாலிங்கத்தை மகாகவி பாரதியின் பாடல்களைப் பாட வைத்தார் மெய்யப்ப செட்டியார். படம்  மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது. அதற்கு  அடுத்த ஆண்டு வெளிவந்த “வேதாள உலகம்” (1948) படத்திலும் பாரதியார் பாடல்களை வைத்தார் ஏவிஎம். அடுத்த டுத்து டி.ஆர். மகாலிங்கத்துக்கு படங்கள் வந்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “ஆதித்தன் கனவு”, சிட்டாடலின் “ஞான  செளந்தரி” என்று தொடர்ந்து அவருக்குத்  தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வந்த வண்ணமிருந்தன. 

ஞான செளந்தரி (1948) படம் தமிழ கத்தில் மட்டுமல்லாது அண்டை மாநில மான கேரளத்திலும் மிகுந்த கவனம் பெற்  றது. அது கேரளத்தின் கொச்சி நகரிலி ருந்த பத்மாஹால் திரையரங்கு. ஞான செளந்தரி வெளியாகி பொன்விழா காண்கி றது. கூட்டம் அலைமோதுகிறது. அந்த சமயத்தில் டி.ஆர். மகாலிங்கமே தமிழின்  உச்சநட்சத்திரம். அந்தப் பொன்விழா வில் பங்கேற்று உரையாற்ற வந்திருக்கி றார் அவர். ரசிகர்கள் படையெடுத்துத் திரண்டுவிட்டார்கள். அந்தத் திரை யரங்கின் பால்கனியில் நின்றுகொண்டு ரசிகர்களைப் பார்த்துக் கையசைக்கிறார் மகாலிங்கம். கூடியிருந்த கேரள ரசி கர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். மேடையில்  தோன்றி உரையாற்றுகிறார் மகாலிங்கம்.  ஞான செளந்தரியில் தாங்கள் பார்த்து ரசித்த அந்த இளம் நாயகன், பாடகன் தங்க ளின் கண்முன்னே நிற்பதால் அவர்கள் பர வசநிலை அடைந்தார்கள் என்றால் அந்தள வுக்கு டி.ஆர். மகாலிங்கம் என்ற அந்த  நாளின் நாயகன் ரசிகர்களின் மனங்களில்  தனது செந்தமிழ்த் தேன்குரலால் நிலை பெற்று நின்றதை உணரமுடியும். மலை யாள ரசிகர்களே இப்படியெனில் தமிழ்  ரசிகர்களின் நிலையை எண்ணிப்பார்த் தால் அந்த அற்புதக் குரலரசனின் கீர்த்தி யின்பால் வியப்பே தங்கும். இப்படித்தான் “ஆடவந்த தெய்வம்” படத்தில் மருதகாசி எழுதிய “சொட்டு சொட்டுனு சொட்டுதுபாரு இங்கே” - என்று  தொடங்கும் பாடலும், “அமுதவல்லி” படத்  தில் இடம்பெற்ற பட்டுக்கோட்டையாரின் பாடலான “ஆடைகட்டி வந்த நிலவோ”- பாடலும் டி.ஆர். மகாலிங்கத்தின் ஏனைய பாடல்களைப்போல அமரத்துவம் பெற் றன. “கவலையில்லாத மனிதன்” - படத் தில் அவர் பாடிய “நான் தெய்வமா இல்லை நீ தெய்வமா” - கடவுள் மறுப்பு  இழையோடும் தனித்துவமான பாடல். டி.ஆர். மகாலிங்கத்திற்கு மற்ற கலை ஞர்களைப்போலவே சொந்தப்படம் எடுக்கும் ஆசை தோன்றியது. “மச்ச ரேகை”தொடங்கி, முற்றுப்பெறாத “தெருப்பாடகன்” வரையில் ஒருசில படங்களைத் தனது மகன் சுகுமாரன் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரித்தார். அவரது சொத்துக்கள்தாம் கரைந்தனவே அல்லாமல் திரைப்படத் தயாரிப்பில் அவர் ஒன்றும் சொல்லிக்  கொள்வது மாதிரி சாதிக்க இயலவில்லை.  இப்படித்தான் தனது குரலால் புகழும் பொருளும் ஈட்டிய அந்த உச்சநட்சத்திரம் தான் தயாரித்த தெருப்பாடகன் திரைப் படம் எடுத்து முடியும் முன்னமே தெரு வுக்கு வந்துவிட்ட நிலை. 

இதனால் தனது கிராமமான சோழ வந்தானில் சோர்ந்து உட்கார்ந்துவிட்ட அவரதுஇல்லத்தின் கதவைத் தட்டினார் கவியரசர் கண்ணதாசன். “மாலையிட்ட மங்கை” திரைப்படம் அவருக்கு திரைத்  துறையில் மறுநுழைவானது.மறுவாழ்வு  தந்தது. செந்தமிழ்த் தேன் மொழியாள்  என அவர் மறுபடியும் தமிழ்த்திரையிசைப்  பாடலுக்குப் புத்துயிரளித்த அதிசயம் நடந்தது. அது அவரின் புத்துயிர்ப்பானது.பாடல்களால் இந்தப் படம் பெருவெற்றி பெற்றது. டி.ஆர். மகாலிங்கத்தை மட்டு மல்ல... அன்றைக்குக் கடும் பொருளா தாரத் தட்டுப்பாட்டிலிருந்த கண்ணதாச னையும் மீட்டது. “எங்கள் திராவிடப் பொன்னாடே” பாடல் உயர்சாதியப் பின்ன ணியும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடும் கொண்டிருந்த டி.ஆர். மகாலிங்கத்தை திராவிட இயக்கத்தாரும் அன்புடன் நெருங்க வழி செய்தது.  தொடர்ந்து இரண்டாவது சுற்று திரை வாய்ப்புகளால் ஒரு வலம் வந்தார் டி.ஆர்.  மகாலிங்கம். நல்ல குரல்வளமும் இசை  ஞானமும் கொண்டவர்களே திரைப்படங்  களில் நாயகத் தகுதி பெற இயலும் என்ற  நிலை பியூசின்னப்பா காலம் தொடங்கி  பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் என்று  நீண்டது தமிழ் சினிமாவின் வரலாறு. பாடக  நடிகர் வரிசையில் டி.ஆர். மகாலிங்கமே கடைக்குட்டியாகிப்போனார். அவருக்குப் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி என்று சொந்தக்  குரலில் பாடவேண்டிய அவசியம் ஏற்படாத வர்களின் பரம்பரை தொடங்கிற்று.  அது வசனங்களின் காலமாக மாறிப்  போனதால் அந்த மாற்றம் இயல்பாக வந்து சேர்ந்தது. டி.ஆர். மகாலிங்கம்போன் றோரின் திரைப்பயணத்திற்கு ஒரு முடிவு, நிறுத்தம் வந்துவிட்டது. துவக்ககாலத்தில் ஒலிபெருக்கித் தொழில்நுட்பம் பெரிதாக  வளராத நிலையில் கடைசி வரிசை ரசிக னுக்கும் கேட்கவேண்டும் என்பதால் குரலு யர்த்திப்பாடவேண்டிய தேவையிலிருந்து பயிற்சி பெற்றவர்கள் டி.ஆர். மகாலிங்கம் உள்ளிட்ட அந்தநாள் கலைஞர்கள். அந்த  நிலையும் மெல்ல மெல்ல மாறிப்போனது. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் அவர்கள் போன்றோருக்கும் பின்னணிக்குரல் தந்து  பாடுவதற்கான பாடகர்கள் உருவாகத் தொடங்கினார்கள். டி.ஆர். மகாலிங்கத் துக்கும் பின்னணி பாடும் வாய்ப்பு தேடி வந்தது. தான் நடித்து, தனக்காகவே சொந்தக்  குரலில் பாடிப் பழக்கப்பட்ட அவர் ஒரு விதத்தில் தன்மானம் உந்தப்பட்டவராக பிற ருக்குப் பாடுகிற பின்னணிப்பாடகராக உரு மாற மறுத்துவிட்டார். 

இருந்தாலும் அவரைத் தொடர்ந்து பாட வைத்து அழகுபார்க்கவென்றே சின்னச் சின்ன வேடங்களில் நன்றியுடன் அவரைப் பாடி நடிக்கவைத்துக்கொண்டேயிருந்தது தமிழ்த் திரையுலகம். அப்படித்தான் ஒரு  திருவிளையாடல், ஒரு அகத்தியர், ஒரு ராஜ ராஜ சோழன் போன்ற படங்களில் அவர் பாடி  நடித்தார். திருவிளையாடலில் அவர் பாடிய அந்த உச்சஸ்தாயிப் பாடல் “இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” இன்றுவரையில் நிகரில்லாது ரசிக்கப்படுகிறது. ராஜராஜ சோழனில் சிவாஜி கணேசனுடன் அவர்  பாடிய “தென்றலோடு உடன்பிறந்தாள் செந்  தமிழ்ப் பெண்ணாள்” பாடலும் இன்றளவி லும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படு கிறது. இப்படி இன்னும் பல பாடல்களைச் சொல்லலாம்.  மொத்தத்தில் டி.ஆர். மகாலிங்கம் தமிழ்த்திரையுலகில் தனது தனித்த குர லால் காலத்தால் அழியாத பாடல்களைத்  தந்துவிட்டுச் சென்ற ஒப்பற்ற இசையரசர் தான். அவர் திரையுலகில் கோலோச்சிய கால மும் மிகமுக்கியமானது. மகாலிங்கம் பாடத்  தொடங்கிய காலத்தில்தான் செவ்விசை வளையத்திலிருந்து வெளியே வந்து மெல்  லிசை எனும் புதுவடிவான திரையிசை தோன்றத்தொடங்கியிருந்தது. அத்துடன் அதற்குத் தோதாக மேலைத் தேசங்களின் இசைக்கருவிகளும் புதிது புதிதாகப் புழக் கத்துக்கு வந்தன. இது டிஆர் மகாலிங்கம் பாடல்களுக்குப் புது மெருகூட்டியது. திரை யிசைக்குப் புத்துணர்வூட்டியது. தமிழு ணர்வு மேலெழுந்த காலமாகவும் இருந்தது அது. எனவே டிஆர் மகாலிங்கத்தின் பாடல்  களில் நல்ல தமிழ்ச் சொற்கள் கவித்துவக் கற்பனை அழகோடு துள்ளி வந்தன. பியூ சின்னப்பாவுக்கோ அல்லது பாகவதருக்கோ அது அந்தளவு வாய்க்கவில்லை.  சினிமா தன்னை உச்சத்தில் வைத்தி ருந்தபோதிலும் ஒதுக்கிய நிலையிலும் இறுதி வரையில் ஸ்பெஷல் நாடக உலகை அவர்  நேசித்தே வந்தார். அவரின் வள்ளி திரு மணம் நாடகத்திற்கு தென் தமிழகத்தில் மக்க ளின் பெரும் வரவேற்பு அவர் இறக்கும் வரை யில் இருந்தது. தனது 53 ஆவது வயதில்  ஏப்ரல் 21, 1978 இல் மரணம் தழுவிய டி.ஆர்.  மகாலிங்கம் என்னும் அந்த இசைத்திரை ஆளுமைக்கு இது நூற்றாண்டு நிறைவு. அவர் இல்லாத இந்த நாளிலும் இன்னும்  பல்லாண்டுகளும் அவரின் குரலில் ஒலித் துக்கொண்டேதான் இருக்கப்போகின்றன அவரின் அந்த அமரத்துவத் தமிழ்த் திரை யிசைப் பாடல்கள்.