tamilnadu

img

ஜூன் 3-இல் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு:

சென்னை, மார்ச் 22- திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வரு மான கலைஞர்.கரு ணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்டச் செய லாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  சென்னை அண்ணா அறிவாலயத் தில் நடைபெற்றது.  அகில இந்திய தலைவர்கள் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் ஜூன் 3 அன்று நூற்றாண்டு தொடக்க விழா மாநாட்டை நடத்து வது என்று முடிவு  செய்யப்பட்டது. இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி  கட்சித் தலைவர்களும், அகில இந்திய தலைவர்  களும் உரையாற்று வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், தயாளு அம்மாள் அறக் கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு “கலைஞர் கோட்டம்” வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்ட பம் உள்ளிட்ட நினைவுச் சின்னங் களை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;