சென்னை, ஜுன் 7 - கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் சென்னை பின்னி மில் மைதானத்தில் புதனன்று (ஜூன் 7) மாலை நடைபெற்றது. திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் வரவேற்றார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் பேசினர். திமுக திருவிக நகர் வடக்கு பகுதி செயலாளர் செ.தமிழ்வேந்தன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, ப.செல்வராஜ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே” என்ற நூலை முதலமைச்சர் வெளியிட ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக் கொண் டார்.