tamilnadu

img

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு சர்வதேச சொகுசு கப்பல் வருகை!

தூத்துக்குடி, ஜன.11 பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன் எம்.எஸ். அமிரா கப்பல் புதனன்று காலை தூத்துக்குடி வஉசி துறை முகத்திற்கு வந்தது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக கப்பல்தளம் 5-இல் அமிரா பயணிகள் கப்பலில் பயணித்த விருந்தினர்கள் பாரம்பரிய இசை யான “நாதஸ்வர மங்கள இசை” இசைத்து மற்றும் நாட்டுப்புற நடனம்  ஆடி வரவேற்கப்பட்டனர். வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், அமிரா கப்பலின் கேப்டன் கீயூபர்ட் வோலோயும், அவரவர் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர். மேற்கு இந்திய பஹாமாஸ் தீவு  கொடியுடன் வந்த எம். எஸ். அமிரா  என்ற பயணிகள் கப்பலானது 204  மீட்டர் நீளமும், அதிகபட்சம் 44.8  மீட்டர் காற்று வரைவு, 13 அடுக்கு கள் மற்றும் 413 தங்கும் அறை களுடன், 835 பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.

இக்கப்பல் அதிகபட்சமாக 20.5 நாட்ஸ் (Knots) (38 ஒருமணி நேரத்திற்கு) வேகத்தில் பய ணிக்கும் திறன் கொண்டது. ஜெர்மனி யிலுள்ள பெர்ன்ஹார்ட் ஷீல்ட் பயணி கள் சேவை (Bernhard Schulte  Cruise Service) மூலம் இயக்கப் படும் இப்பயணிகள் கப்பலில் மூன்று உணவகங்கள், ஓய்வறைகள், நூலகங்கள்,  விளையாட்டு, அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கான அறைகள் மற்றும் நீச்சல் குளங்கள் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும். இக்கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து மார்க்கமாக கூடுதலாக 5 பயணிகள் இக்கப்பலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் சுற்றுலா பயணிகள் 70 பேர் திருநெல்வேலியிலுள்ள புனித கிறிஸ்துவ தேவாலயம் மற்றும் நெல்லையப்பர் கோயிலுக்கும், 200க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தூத்துக்குடியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான புனித பனிமய மாதா பேராலயம் மற்றும் தூத்துக்குடியில் உ்ள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட்டனர். அதன் பின்னர் புதனன்று மாலை யில் தூத்துக்குடியில் இருந்து இலங்கை துறைமுகம் புறப்பட்டு சென்றனர். இக்கப்பலில் வந்த வெளி நாட்டு பயணிகளை கையாளு வதற்கு சுங்கத்துறை, குடியுரிமை மற்றும் பொது சுகாதார அலுவல கங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் செய்திருந்தது.