திருச்சிராப்பள்ளி, மார்ச் 3- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பட்டியலின மக்களை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதை கைவிட வேண்டும். உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு சார்பில் திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலை வர் த.செல்லக்கண்ணு தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் எஸ்.கே. மகேந்திரன், பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், பொருளாளர் இ. மோகனா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சங்க திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.கனல்கண் ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வன், மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ், புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் த. சலோமி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் த.ரஜினி காந்த், திருச்சி புறநகர் மாவட்டச் செய லாளர் ஜெ.சுப்பிரமணியன், சிபிஎம் புற நகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுச்செய லாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகை யில், ‘‘புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் காவல்துறை முறையான விசாரணை யை நடத்தாது என்பதனால் அதற்கு உயர் பொறுப்பில் உள்ள சிபிசிஐடி விசா ரணை நடத்தப்பட்டும், சிபிசிஐடி விசா ரணையிலும் நியாயம் கிடைக்க வில்லை என்றால் சிபிஐ விசாரணை கோரும் தன்மை என்பது இந்தியாவில் உள்ளது. வேங்கைவயல் பிரச்சனையில் சட்டம்-ஒழுங்கு காவல்துறையினர், எந்த நிலைப்பாட்டை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களை விசாரித்தார் களோ அதேநிலைப்பாட்டை எடுத்து இன்றைக்கு சிபிசிஐடி விசாரணை நடத்துகிறது. பாதிக்கப்பட்ட பட்டிய லின மக்கள் 10 மணிநேரம், 12 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்படு கிறார்கள். ஆனால், இந்த பாதிப்புகளை ஏற்படுத்திய சாதி ஆதிக்க சக்திகள் மீதான விசாரணை என்பது சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறுவதாக காவல்துறையில் இருப்பவர்களே சொல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே, உண்மை குற்றவாளி களை பாதுகாப்பதற்கான நட வடிக்கையை சிபிசிஐடியும் மேற்கொள் கிறதோ என்ற அச்சம் உருவாகின்றது. இதனால், ஆளும் அரசு உண்மை யான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இயல்பான வாழ்க்கையை வேங்கை வயலில் இருக்கக்கூடிய பட்டியலின மக்கள் வாழ்வதற்கான நட வடிக்கையை ஆட்சியாளர்கள் உத்தர வாதப்படுத்த வேண்டும் என்றார்.