கோவை, டிச.4- கோவையில் சனியன்று பெய்த கனமழையால் சாலையெங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஒடிய நிலையில், கார் மற்றும் பேருந்து ஒன்று மழைநீரில் அடித்துச் செல் லப்பட்டது. கோவை மாநகரில் சனியன்று மதியம் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழையின் காரண மாக ரயில் நிலையம், காந்திபுரம், லட் சுமி மில், புளியகுளம், வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலுள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டது. இதற்கிடையே, கோவை உப் பிலிபாளையம் அண்ணா மேம் பாலத்தின் கீழ் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது அப்பகுதியை கடந்து செல்ல முற் பட்ட கார் ஒன்று மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு தண்ணீரில் முழ்கியது. இதில் காரில் இருந்தவர்கள் நல் வாய்ப்பாக உயிர்தப்பினர். இதே போல், ரயில் நிலையம் அருகே யுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் சென்ற தனியார் பேருந்து ஒன்று மழைநீரில் முழ்கியது. இதைய டுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மழைநீரில் முழ்கிய கார் மற் றும் பேருந்தை மீட்கும் பணியில் ஈடு பட்டனர்.