tamilnadu

img

இபிஎப் பென்சனர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.25 சென்னையில் மணியோசை எழுப்பும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.10- இபிஎப் பென்சனர் நலச்சங்கங் களின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு கூட்டம் திங்களன்று திருச்சி வெண் மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை இபிஎப் பென்சனர் அசோசியேஷன் மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். துணைச் செய லாளர் எஸ்.உமாகாந்தன் துவக்க வுரையாற்றினார். மாநிலச் செயலா ளர் கே.பி.பாபு சிறப்புரையாற்றினார். சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் எஸ்.சம்பத் விளக்கிப் பேசி னார். இணைச் செயலாளர் டி. சுரேஷ்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் வி.ஆர்.சாந்தாராம் நன்றி கூறினார்.  கூட்டத்தில், குறைந்தபட்ச பென்  சன் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், மருத்துவக் காப்  பீட்டுத் திட்டமாக இஎஸ்ஐ திட்டத்தை  இபிஎப் பென்சனர்களுக்கும் அமல் படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்  பின் அடிப்படையில் வழங்க வேண்  டிய முழு சம்பளத்திற்கான பென் சனை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்பதை இபிஎப் நிர்வா கம் கைவிட்டு நேரடியாக மனுக் களைப் பெற வேண்டும் என்ற கோரிக்  கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்துவது, முதற்கட்ட மாக ஏப்ரல் 25 அன்று சென்னை வள்ளு வர் கோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்  பினர்கள் பங்கேற்கும் வகையிலும், ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு  செல்லும் வகையில், மணியோசை எழுப்பும் போராட்டம் நடத்துவது, ஏப்ரல் மாத இறுதியில் தமிழகம் முழு வதும் பிஎப் மண்டல அலுவலகங் கள் முன் மணியோசை எழுப்பும் போராட்டம் நடத்துவது, ஒன்றிய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் மாதம் வரை தொடர் போராட்டம், இயக்  கங்கள் நடத்துவது. டிசம்பர் மாத  இறுதியில் அகில இந்திய தலைமை யுடன் இணைந்து இந்தியா முழு வதும் ரயில் மறியல் போராட்டம் நடத்து  வது. இபிஎப் பென்சனர் கோரிக்கை களுக்குத் தீர்வு காணும் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் (2024) வாக்களிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.