மதுரை, ஜூன் 23- போட்டித்தேர்வுக்கு தயாரா கும் மாணவ, மாணவியர்க்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பூங்காவை உரு வாக்கி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இந்தியாவுக்கே வழிகாட்டியுள் ளார் என மருத்துவ நல்வா ழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் புதிதாக ரூ.6 கோடியே 34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 14 ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலை யங்களை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எம்.மூர்த்தி ஆகியோர் வெள்ளியன்று திறந்து வைத்தனர். இந்த விழாவில், மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசுகையில், ‘‘போட்டித்தேர்வுக்கு தயாராகும் வீடுகளில் படிப்பதற்கு வசதி யற்ற ஏழை, எளிய மாண வர்கள் பூங்காக்களிலோ அல் லது சாலையோரங்களிலோ தெரு விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து படிக்கும் சூழல் இருந்தது.
ஆனால், இந்தியாவுக்கே வழிகாட்டுவது போல போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் படிப்பதற் கென்றே அனைத்து வசதி களுடன் கூடிய ஒரு பூங்கா போன்ற இடத்தை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் உருவாக்கியுள்ளார். மேலும் அங்கு இருக்கை கள் மற்றும் கழிப்பறை, குடி நீர் வசதிகளை ஏற்படுத்தியுள் ளார். இதை நிர்வகிப்பதற்கு தன்னார்வத் தொண்டு நிறு வனங்களை கொண்டு நிர் வகித்து, சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதை பார்த்தவுடன் எனது உதவியாளர்களிடம் இதனை வீடியோ எடுக்கச் செய்தேன். மேலும் இதே போன்ற ஒரு கட்டமைப்பை சென்னையிலும் உரு வாக்கப் போகிறேன். இதை சொல்வதற்கு காரணம் இன் றைக்கு எல்லாவற்றிக்கும் மதுரை ஒரு வழிகாட்டி மாவட்ட விளங்கிக் கொண்டு இருக்கிறது’’ என்றார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, புதூர் பூமி நாதன், சோழவந்தான் வெங் கடேசன், மண்டலத் தலை வர்கள் வாசுகிசசி குமார், சுவிதா விமல், முகேஷ் சர்மா, மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.