மின்வாரியத்தில் ஓய்வு பெற்று கலை இலக்கிய பணி செய்து வரும் நாடக வேந்தர் மதுரை சேகர் (எ) ஜி.சந்திரசேகரன், கவிஞர் ஜி.மோகன்ராஜ், நாடக நகைச்சுவை தென்றல் கே.ரெங்கநாதன் (எ) கே.ஆர்.நாதன், நடிப்பிசைத் திலகம் வி.வசுமதி, கவிஞர் ஏ.லோகநாதன் (எ) கார்க்கிநாதன் ஆகியோருக்கு திங்களன்று (பிப்.27) தாம்பரத்தில் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை 1, 2 மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினர். மத்திய அமைப்பின் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மத்திய அமைப்பின் மாநில பொருளாளர் என்.வெங்கடேசன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வே.ராஜசேகரன், மூத்த தலைவர் ஆர்.கே.ஸ்ரீதரன், மத்திய அமைப்பின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் எஸ்.அப்பனு, ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில பொருளாளர் ஏ.பழனி, மூத்த தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமைப்பின் சென்னை கிளை-2ன் செயலாளர் பி.கவுதமன், தாம்பரம் கோட்டச்செயலாளர் டில்லிகுமார், பொருளாளர் இ.முருகன் உள்ளிட்டோர் கலைஞர்களை வாழ்த்தி பேசினர்.