tamilnadu

img

செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா

செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா

தருமபுரி, மே 15- சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் கலந்து  கொண்ட செந்தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில  இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் செம்படைப் பேரணியில் தரு மபுரி மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட செந்தொண்டர்களுக்கான பாராட்டு விழா, தருமபுரி முத்து இல்லத்தில் வியாழனன்று நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலா ளர் இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, வி.மாதன், சோ.அருச்சுனன், வே.விசு வநாதன், ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள் குமார், தலைவர் குரளரசன், பொருளாளர் சிலம்பரசன், மூத்த தோழர் ஜி.நக்கீரன் உட் பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ‘பாசிசம்’ என்ற தலைப்பில் முத்துக்கண்ணன் பேசுகையில், செந்தொண் டர் படை ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. ஹிட்லர் படைக்கு எதிராக செந்தொண்டர் படை, செஞ்சேனை படையாக பின்னால் மாறி யது. அகில இந்திய மாநாட்டில் செந்தொண் டர் அணிவகுப்பு மிடுக்காக இருந்தது. காவல்  துறையினரே வியந்தனர். மேலும், கார்ப்ப ரேட்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகின்றன. முதலாளிகள் லாபம் ஒன்றே  குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்ற னர். வேலையில்லா திண்டாட்டம் வட மாநிலங்களில் கடுமையாக உள்ளது. இதனை பயன்படுத்தி உழைப்பு சுரண்டல் நடக்கிறது. ஒருபுறம் மோடி அரசு வெறுப்பு  அரசியலை செய்து வருகிறது. பெரும் பான்மை மக்களை இந்துத்துவா கொள்கை யின் கீழ் மாற்றி, பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதே பாசிசம் ஆகும். இந்த வேலையை பாஜக செய்து வருகிறது. இந்துத்துவா அரசியலை நாம் முறியடிக்க வேண்டும், என்றார்.