மதுரை, மே 14- மதுரையில் கொரோனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் மக்களுக் காக சமூக பணியாற்றிவரும் என்சிசி மாணவர்களுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அமெ ரிக்கன் கல்லூரி வளாகத்தில் சானிடை சர் மற்றும் குளிர்பானங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர், கொரோனாவை கையாள் வதில் அரசிடம் குழப்பம் நிகழ்கிறது. ஊர டங்கு என அறிவித்துவிட்டு எல்லாவற்றை யும் திறந்துவிடுவது என்னவென்றே புரிய வில்லை. ஊரடங்கு தொடரும் ஆனால் எல்லாவற்றையும் திறந்துவிடுவோம் என்றால் அரசு என்ன செய்யப்போகிறது. அரசு கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அரசிடம் தெளி வான திட்டமிடல், புரிதல், ஒருங்கிணைப்பு இல்லை. மத்திய அரசு தன்னால் முடிந்த குழப் பத்தை செய்கிறது. மாநில அரசு அந்த குழப்பங்களுக்குள்ளே இருந்து பல குழப் பங்களை செய்து வருகிறது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பு வதில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வரு கிறது. வெளிமாநில தொழிலாளர்களை கட்டணம் கட்டி அனுப்புவதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் குழப்பம் உள்ளது. அரசு நிவாரணங்கள் என்பது ஹெலி காப்டரில் இருந்து பண மழையை கொட்டு வது போல இருக்க வேண்டும். மக்கள் மத்தியில் பணம் இல்லையென்றால் மிகப் பெரிய நெருக்கடி இருக்கும். பிரதமர் மோடி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் 20 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகள் உள்ளது என்று கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அரசின் ஒதுக்கீடு விவரங்கள் தெரிந்த பிறகே அதை பற்றி பேச முடியும் என்றார்.