சென்னை, ஏப்.7- தமிழ்நாடு சட்டப்பேரவை யில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத் துக்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “புதிய குடும்ப அட்டைகள், விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்கப்படும் என்று அறிவித் தோம். அதன்படி, கடந்த 23 மாதங்களில் 11 லட்சத்து 20 ஆயிரம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட் டுள்ளன. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளில் 12 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப அட்டைகள் முன்னுரிமை அட்டைகளாக மாற்றப்பட்டுள் ளன. இதனால் 41 லட்சத்து 68,292 பேர் பயனடை கின்றனர்” என்றார். புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இனிமேல் வட்டாட்சியர் அலுவலகத் திற்கோ அல்லது இடைத்தர கர்களையோ மக்கள் அணுகத் தேவையில்லை. புதிய குடும்ப அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் பெறுவதற்கு ஆன் -லைனில் குறைந்த கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை வீட்டுக்கே வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜூன் முதல் செறிவூட்டல் அரிசி!
ரத்தசோகை உள்ளவர்க ளின் நலனுக்காக வைட்டமின், இரும்புச் சத்து, நுண்ணூட்டச் சத்து உள்ள செறிவூட்டப்பட்ட அரிசியை அனைத்து ரேசன் கடைகளிலும் ஏப்.1 முதல் விநி யோகிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தி யுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பதற்கான வச தியை அரவை ஆலைகளில் ஏற்படுத்த வேண்டியிருப்பதால் வரும் ஜூன் மாதம் வரை ஒன்றிய அரசிடம் கால அவகா சம் கேட்டுள்ளோம். இந்த அரிசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், “ தமிழ்நாட்டில் 35,941 நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக், கண் கருவிழி என இருமுறையில் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
மண்ணெண்ணெயை குறைத்த ஒன்றிய அரசு!
தமிழ்நாட்டில், எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ஒரு எரிவாயு இணைப்புள்ள குடும்ப அட்டைதார்களுக்கு விளக்கெரிக்கவும், சமையல் செய்வதற்கும் மண்ணெண் ணெய் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. மாதம் ஒன்று நமது மாநிலத்திற்கு தேவையோ 38,165 கிலோ லிட்டர். இந்த ஒதுக்கீடு, ஒன்றிய பாஜக அரசால் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது 4,520 கிலோ லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரி வித்தார். ரூ. 63 கோடியில் சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொது விநியோக திட்டப்பொருட் களின் சேமிப்பை கொள்ள ளவை மேம்படுத்துவதற்காக மொத்தம் 9 ஆயிரம் டன் கொள் ளளவு கொண்ட 4 சேமிப்பு கிடங்குகள் புதிதாக ரூ.16 கோடி யில் கட்டப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங் களில் 52 ஆயிரம் கொள்ளளவு டன் கூடிய மேற்கூரை அமைப்பு டன் நெல் சேமிப்பு கிடங்குகள் ரூ.50 கோடியில் அமைக்கப் படும் என்றும் அறிவித்தார்.