தஞ்சாவூரில் பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்
தஞ்சாவூர், மே 11- சோவியத் செஞ்சேனை 1945 ஆம் ஆண்டு ஹிட்லரின் பாசிசப் படையை வீழ்த்தி வெற்றி கொண்டதன் 80 ஆவது ஆண்டு தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சை மாநகரக் குழு சார்பில், பாசிச கருத்தியல் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சரவணன், கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இ.வசந்தி, களப்பிரன், கு.சந்துரு, மூத்த தலைவர்கள் என். சீனிவாசன், கோ. நீலமேகம், தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ்.கோவிந்தராசு, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே. செந்தில்குமார், மாநகரக் குழுத் தோழர்கள் வீ.கரிகாலன், சி.ராஜன், எம்.ராஜன், ஏ.தர்மராஜ், ஆர்.மணிமாறன், அரங்கத் தோழர்கள் ப.சத்யநாதன், ஆர்.பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெ.சேவையா, முத்துக்குமரன், ஏஐடியுசி துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.