தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் இலாகா மாற்றம்!
ய்யப்பட்டுள்ளது. அமைச்சர் க. துரைமுருகன் இடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரகுபதி வசமிருந்த சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட, அமைச்சரவை மாற்றத்திற்கான முதலமைச்சரின் இந்த பரிந்து ரைக்கு, ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கூடுதலாக மின்சாரத்துறையில், வீட்டுவசதித்துறை அமைச்சர் வி. முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை ஆர்.எஸ். ராஜ கண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறையும் ஒதுக்கப்பட்டது. மேலும், மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மீண்டும் அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 2021-ஆம் ஆண்டில், தேர்வு எழுதிய 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி பெற்றனர். 2022-இல் தேர்வு எழுதிய 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 மாண வர்களில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 988 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.76. அடுத்த, 2023-ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்கள் 8 லட்சத்து 3 ஆயி ரத்து 385 பேர்களில் தேர்ச்சி பெற்றது 7 லட்சத்து 55 ஆயி ரத்து 451 மாணவர்கள். தேர்ச்சி விகிதம் 94.03. கடந்த 2024 ஆம் ஆண்டில் தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 60 ஆயிரத்து 606. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196. தேர்ச்சி விகிதம் 94.56 ஆகும். தற்போது 0.47 சதவிகிதம் கூடுதலாக 95.03 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜூன் 25 முதல் துணைத் தேர்வுகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்தும் தேர்வில் பங்கேற்காத வர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான துணைத் தேர்வு கள் ஜூன் 25 முதல் தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தோல்வி அடைந்த மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நூற்றுக்கு நூறு
இந்த தேர்வில் மொத்தம் 26,877 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக கணினி அறிவியலில் அதிகபட்சமாக 9,536 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மொழிப் பாடமான தமிழில் 135 மாணவர்கள் 100க்கு 100 எடுத்துள்ளனர். இயற்பியலில் 1,125 பேர், வேதியியலில் 3,181 பேர், உயிரியலில் 827 பேர், கணிதத்தில் 3,022 பேர், தாவரவியலில் 269 பேர், விலங்கியலில் 36 பேர், வணிகவியலில் 1,624 பேர், கணக்குப்பதிவியலில் 1,240 பேர், பொருளியலில் 556 பேர், கணினிப் பயன்பாடுகளில் 4,208 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 273 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஏதேனும் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,853 ஆகும். அதே நேரத்தில், ஆங்கிலத்தில் ஒருவர் கூட முழு மதிப்பெண் எடுக்கவில்லை.
மாற்றுத் திறனாளிகள்
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,019 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 7,466 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், 140 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். இதில் 130 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மேலும், தனித்தேர்வு எழுதிய 16,904 மாணவர்களில் 5,500 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.