tamilnadu

img

கற்பனைத் திறன் வளர்க்காத கல்வி முறை

 இரண்டாயிரத்து நானூறு ஆண்டுக ளுக்கு முன்பாகவே இந்தியாவில் வானவியலும், மருத்துவமும், கணித முறைகளும் பயன்படுத்திய பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம். விண்வெளியில் ஆரிய பட்டரும், மருத்துவத்தில் சுஸ்ருதியும், தன்வந்திரி யும் இன்றளவும் முன்னோடிகளாக நெஞ்சில் நிறைந்துள்ளார்கள். பூஜ்ஜியத்தைக் கண்டு பிடித்து கணிதத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய வர்கள் நம் முன்னோர்கள். கி.மு. ஆறாம் நூற்றாண் டில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த மாணவர்கள் கல்வி பயின்றதாக சான்றுகள் உள்ளன. இப்பல் கலைக்கழகம் ஒரு அறிவுக் கோயிலாக இருந்தது  மட்டுமல்ல, உலக அறிவு ஜீவிகளின் சரணாலய மாகவும் இருந்ததாக சீனப் பயணி யுவான்-சுவாங் குறிப்பிட்டுள்ளார். இதற்கு சில நூற்றாண்டு களுக்கு முன்பாகவே தட்சசீல பல்கலைக்கழகம் இருந்ததாகவும், ஆயிரக்கணக்கான மாண வர்கள் அங்கு தங்கி கல்வி பயின்றதாகவும் வர லாற்று ஆவணங்களிலிருந்து தெரிய வருகிறது. 

தகவல் குவியலும் கனவுகளும்
இத்தகைய உயர்ந்த மரபுகள் கொண்ட நாட்டில், தற்போது இங்கே உள்ளது மனப்பாடக் கல்வி. நம் கல்வி நிலையங்களில் குறிப்பிட்ட சில  பாடங்களை வைத்து அவற்றை மனப்பாடம் செய்து, அவற்றுக்குள்ளிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்தப் பாடங்களைக் கொண்டே  பதில் எழுதினால் போதும் என்ற நிலை உள்ளது.  அப்படி கச்சிதமாக பதில் சொல்லும் மாணவர் சிறந்தவராக மேலெழுந்து வருகிறார். பொறியி யல், மருத்துவப் படிப்புகளில் அதிகமான வெற்றுத் தகவல் குவியல் கொண்டவை. கருத்து நிலை களும், கருத்தியல்களும் மிகமிக குறைவாகவே  இப்படிப்புகளில் உள்ளன. சுயமாக சிந்திக்க  வேண்டிய சவால்கள் அநேகமாக இருப்பதில்லை.  இப்பாடத் திட்டங்களில் தகவல்கனை மட்டுமே  சொல்ல முடியும். தகவல்களை மட்டுமே விவா திக்க முடியும். ஒரு போதும் கருத்துக்களை நோக்கி வரமுடிவதில்லை.  அவர்களின் துறை சார்ந்த அடிப்படைத் தகவ லறிவு தவிர எதுவுமே தெரியாது. அந்த துறை யிலேயே கருத்துகளை, கோட்பாடுகளை, புதிய நகர்வுகளை மிகச் சிலர் தவிர பிறரால் புரிந்து கொள்ள முடியாது. அதற்கான அறிவுப் பயிற்சியே  அவர்களிடம் இல்லை. நாம் வெறுமே தொழில் நுட்ப ஊழியர்களை மட்டும் உற்பத்தி செய்யும் சமூகமாக இருக்கிறோம். அதே வேளையில் வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் போன்ற  துறைகளில் மாணவர்கள் கருத்தியல்களைப் படிக்கிறார்கள். ஒரு சமூகத்தின் கனவுகளை வடி வமைப்பவன், கொள்கையை வகுப்பவன் கலைக் கல்வி கற்று வெளிவரும் மாணவனே. அனைத்து கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்க ளும் கனவுகள் வழியாக வெளிவந்தவையே. மோசமான பாடத்திட்டத்தால் இந்தியாவி லுள்ள பிஞ்சு மனங்களின் கனவுகள் அழிக்கப்படு கின்றன.

வெற்றியடைய வேண்டும் என்ற பெற்றோ ரின் ஆக்கிரமிக்கப்பட்ட சிந்தனைகளும், போட்டித் தேர்வுகளும் மாணவர்களை சீரழிக்கின் றன. இத்தகைய உயர்கல்வி அமைப்பு முறை மாணவர்களின் மரணங்களுக்கு இட்டுச் செல்வ தால் இங்கே வெற்றியாளர் என்று யாரும் இல்லை.  பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்த பின், நீட் தேர்வு, பொறியியல் கல்லூரிகளுக்கு, மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள், சில குறிப்பிட்ட கல்லூரிகளின் சேர்க் கைக்கும் தேர்வுகள் எழுத வேண்டியுள்ளது.  இளைஞர்கள் எங்கே அழைத்துச் செல்லப்படு கிறார்கள்? போட்டித் தேர்வு களில் வெற்றி பெற்றவர்கள் அறிவாளர்களாகவும், தோற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்களாக ஒதுக்கப்படுவதும் தான்  அறிவுலக வளர்ச்சியா? கல்விச் சந்தையில் பெரும் வணிகர்களால் நடத்தப்படும் பள்ளி என்னும் மதிப்பெண் தொழிற்சாலையில் தேர்வு களின் வெற்றிக்காக மாணவர்கள் வார்த் தெடுக்கப்படுகிறார்கள் .இவற்றையெல்லாம் அறியாமல், தங்கள் குழந்தைகளின் ஆளுமை முக்கியமானது எனக் கருதும் பெற்றோர்கள் பிரபலமடைந்த பயிற்சிப் பள்ளிகளை நோக்கிச் செல்கிறார்கள்.

வெற்றி என்பது வெறியாக...
பதினேழு வயதுப் பையனுக்கு நீட் தேர்வுக்கும், பொறியியல் படிப்புக்கும் தனியார் பயிற்சி பள்ளி கள் தேர்வுக்கு மேல் தேர்வு எழுத வைத்து மூச்சு விடக்கூட முடியாமல் மனஅழுத்தத்தில் திணற வைக்கிறார்கள். அவன் பதட்டப்படுகிறான். பெற்றோர் கவலைப்படுகிறார்கள். அந்த நேரத் தில் அவனிடம் கற்பனையை வளர்க்கும் கவிதை, இலக்கியம், திரைப்படங்கள், சுற்றுலாப் பயணம் ஆகியவற்றைப் பற்றி பேசினால் இவையெல்லாம் பயனற்றது என்கிறான். பெற்றோர்கள் பாடத்தைத் தாண்டி  வேறெந்த விஷயங்களையும் வாசிக்க விடுவ தில்லை. அம்மாணவன் தேர்வில் வெற்றியை  நோக்கியே சிந்திக்கப் பழக்கப்படுத்தப்படு கிறான். மனப்பாடக் கல்வி முறையில் வார்த் தெடுக்கப்பட்ட அவன் உயர் அழுத்தப் போட்டித் தேர்வுகளாலும், பெற்றோரின் விருப்பங்களைத் திணிப்பதனாலும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். போட்டித் தேர்வுகள் என்ற நோய் மாணவர்களின் கற்பனைத் திறனை மழுங்கடிக்கிறது. கற்பனையான வெற்றிக்கு அவர்கள் கடுமையாகப் பாடுபடுகிறார்கள். பெருந்திரளான மக்கள் தொகை கொண்ட பாகு பாடான சமூகத்தில் சிலருக்கே வாய்ப்புகள் கிட்டு கின்றன. வெற்றி என்பது வெறியாக மாறிக் கொண்டிருக்கையில் வாய்ப்பிழந்தவர்கள் விபரீதமான முடிவுகளுக்குச் செல்கிறார்கள். பள்ளி இறுதித் தேர்வுகள் முடிந்தவுடனேயே மாணவர்கள் விரும்பாவிட்டாலும் அறிவியல், வணிகவியல் பாடங்களையே உயர் கல்விக்கு  தேர்வு செய்ய பெற்றோர்களும், ஆசிரியர்களும் விரும்புகிறார்கள். மாணவர்களின் தனித்திறனை வளர்த்தெடுப்பது பற்றி யோசிப்பதில்லை. சுயமாக சிந்திக்க விடுவதே இல்லை. இங்குதான்  மாணவர்களின் மனஅழுத்தம் துவங்குகிறது. இந்த அழுத்தம் அவர்களின் கற்பனைத் திறனைச்  சிதைக்கிறது. அறிவியல், வணிகமேலாண்மைப் பாடங்களும், அவற்றுக்கான செய்முறைப் பயிற்சிகளும் மிக உயர்வாக மதிக்கப்படுகின்றன.

அதே வேளையில் கலைப் பிரிவிலுள்ள சமூக வியல், மானிடவியல், வரலாறு போன்ற பாடங்கள் மிகக்கீழாகக் கருதப்பட்டு, அவற்றிற்கெல்லாம் எதிர்காலம் இல்லையென போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்ளும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எண்ணுகிறார்கள் தேர்வில் வெற்றியடைவதற்கு இத்தகைய பொறுப்பற்ற தயாரிப்புகளால், மாணவர்களுக்கு கற்றலில் இனிது என்ற மனப்பக்குவம் கிடைப்ப தில்லை. அவர்களது மனது எந்திரமாக்கப்படு கிறது. பயிற்சி பள்ளிகளில் சிரித்து மகிழ்வதற்கு இடமில்லை. உரை நூல்கள் மூலம் கற்பிக்கப்படுவ தால், சுயதேடுதல் முயற்சியின்றி, போர்க்கால அடிப்படையில் பயிற்றுவித்து அதிக மதிப்பெண்  பெறும் முன்னணி மாணவர்களாக வார்க்கப்படு கிறார்கள். கல்லூரி நிறுவனங்கள் பண ஆசை, தொழில்திறன், நிர்வாக மேலாண்மை ஆகியவை கலந்து மிக உயர்ந்த ஊதியம் பெற மாணவர்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தயாரித்துக் கொடுக்கின்றன. தற்கால முத லாளித்துவ தொழில்நுட்பத் துறையில் வளாகத் தேர்வு மூலமாக கார்ப்பரேட் கம்பெனியில் உயர்  பதவியில் அமர்வது மாணவர்களுடைய லட்சி யங்களின் அட்டவணையில் முதல் இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு சிந்தனையும் செயல்பாடும் அதை நோக்கியே உள்ளது. கல்வியானது வேலை அல்லது தொழிலுக்கான சுங்கச் சீட்டாக மாறிப் போனது. வெற்றி மனப்பான்மை மாணவர்களை எதை நோக்கி இழுத்துச் செல்கிறது? அதிகப் பணம் சம்பாதிப்பது, அரசுத் துறை, தனியார் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் அமர்வது, அதிகாரம் செலுத்தக்கூடிய அரசுப் பணியில் இடம் பிடிப்பது  ஆகிய இந்த மூன்று அடுக்குகளுக்குள் ஏதாவது ஒன்றில் தள்ளுவதற்கு பெற்றோர்கள்  முயற்சி செய்கிறார்கள். குடிமைப் பணி, ஐஐடி, ஐஐஎம் தேர்வு முடிவுகள் வெளி யாகும் நாள் தேசிய முக்கியத்துவம் பெறுகிறது. அதில் தேர்வானவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைந்ததற்கான சான்றாக நினைக்கிறார்கள். ஊடகங்களில் அவர்களது புகைப் படமும் நேர்காணலும் வெளியாகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் வருமான வரித்துறை  அதிகாரிகள் ஆகியோருக்கு தனி பங்களா, சைரன் விளக்கோடு தனி கார், காவல் அதிகாரி உட்பட அனைத்து அலுவலர்களும் பணிந்து வணங்குவது உயர்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரமிப்பாக உள்ளது. நிலவுடமை சமூகத்தின்  மிச்சங்களான இத்தகைய பந்தா, படோபடங்களை அடைய வேண்டுமென்ற வேட்கை உருவாகிறது.

படைப்புத்திறனை அழித்து...
இத்தகைய வெற்றிக்கான பாதைகள் பல கசப்பான அனுபவங்களை உருவாக்கு கின்றன. இது ஒருவருடைய படைப்புத் திறனை அழித்து, கூட்டு முயற்சியை  முடக்குகிறது. நேர் மறையான சிந்தனைகளை தடுக்கிறது. பயிற்சி பள்ளியில் முடி வில்லாமல் நடத்தப்படும் சோதனைத் தேர்வுகளும், பாடம் நடத்தும் முறைகளும் ஒலிம்பிக் வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது போன்று உள்ளது. ஒரு அணு  உலையை நிர்மாணிப்பது போன்ற பதட்டம் அல்லது பருவநிலை மாற்றத்தைப்  பற்றிய சர்வதேச மாநாடு நடப்பது போல் பரபரப்பாக அமைக்கப்படுகின்றன. வாழ்க்கையை கற்றுக்கொள்ள, சமூகத்தைப் புரிந்துகொள்ள இத்தகைய போலி  பிரமாண்டங்கள் உதவுவதில்லை. ஊதிப் பெருக்கப்பட்ட எதிர்பார்ப்புகளும், உடைந்த கனவுகளும் பயிற்சி பள்ளி அறையில்தான் உருவாகின்றன. இத்தகைய வெற்றி படைப்புத் திறனின் தோல்வியாக மாறுகிறது. வெற்றிகளை உருவாக்கும் முறைகள் ஊழலின் வேராக மாறுகிறது. மருத்துவம், பொறியியல், மேலாண்மை படிப்புகளுக்கு மிகையான பயிற்சிக் கட்டணம், கல்லூரிகளில் சேர்வதற்கு நன்கொடை போன்ற  செலவினங்களை ஈடுகட்ட பதவியைப் பயன்படுத்துகிறார்கள். பணியிடங்களில் லஞ்சமும், ஊழலும் பெருகுகிறது. கட்டுமான ஒப்பந்தங்களில் மருத்துவமனை முதல்  காவல் நிலையம் கட்டுவது வரை பெரிய ஊழல் நடக்கிறது. கனிமவள விநியோகத்தில் பல அடுக்குகளில் பணப்பரிமாற்றம் நிகழ்கிறது. மேலும் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் வரதட்சணை வரம்பு உயர்ந்து, ஆடம்பர திருமணங்கள் நடக்கின்றன.

வென்றாலும் தோல்வியா?
பொருத்தமில்லாத பாடப் பொருள் மற்றும் ஊக்கமற்ற கற்பித்தல் முறையினால்  ஓவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தோல்வியாளர்கள் உருவாகிறார்கள்.  தாங்கள் சமூகத்தில் மறுக்கப்பட்டு, ஒதுக்கப்படுவதாக நினைக்கிறார்கள்.அவர்களு டைய வாழ்க்கைப் பாதையில் மனக் காயங்கள் ஏற்பட்டு, நம்பிக்கை இழக்கிறார் கள். இந்த பொருளியல் சமூகத்தில் உண்மையிலேயே யாரும் வெற்றியாளர்  கிடையாது. ஒவ்வொருவருமே தோல்வியாளர்தான்.உதாரணமாக பள்ளி இறுதித் தேர்வில் ஒரு மாணவர் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் அவருக்கு பெற்றோர்களா லும், நண்பர்களிடமிருந்தும் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஏனென்றால் சக மாணவர் 95 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்கிறார்.  ஐஐடியில் இடம் கிடைக்காமல் கலைக் கல்லூரியில் அறிவியலும், வணிக மேலாண்மையும் படித்தால் நீங்கள் தோல்வியாளர். அதேபோல் ஐஐடியில் படித்து அமெரிக்காவில் வேலை கிடைக்கவில்லையென்றால் அவர் தோல்வியாளர். ஆகையால் இங்கு வெற்றியே தோல்வியாகிறது. ஒரு பன்னாட்டுக் கம்பெனியின் மென்பொருள் துறையில் பணிபுரியும் இருபத்து மூன்று வயது இளம் பொறியாளர் அதிக வசதிகள் நிரம்பிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஒரு சுமாரான வீட்டில் குடியிருந்து வரும் ஐம்பது வயது நிரம்பிய வரலாற்றுப் பேராசிரியரை விட அவர் வெற்றியாளராகக் கருதப்படுகிறார். இந்தப் பொறியில் இருந்து தப்புவது கடினம். அதிகாரமிக்க உயர் பதவி, சமூக அந்தஸ்து போன்ற கருத்துக்கள் இளம் மனதுக்காரர்களை மட்டுமல்ல, பிள்ளைகளை  நல்வழிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிற பெற்றோர்களையும் பீடித்துள்ளது.

பயனுள்ள கல்வி முறையைக் கொண்டுவருவதில் பெருஞ்சிக்கல் உள்ளது. மானிட சமுதாயத்தில் கற்பனைத் திறன் இல்லாமல் சமூக மாற்றம் ஏற்படாது.  இத்தகைய கடினமான சூழ்நிலையில் இளைஞர்களுக்கு புதிய பாதையை  காட்ட வேண்டியதுள்ளது. தனது பூர்வீகமான காட்டை மறந்து, வளையத்துக்குள்  தாவும் சர்க்கஸ் புலி போல் இன்றைய மாணவர்கள் உள்ளனர். அதே வேளையில் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் பெருங்காடு உள்ளதை உணர்த்தக்கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது. மனிதனுக்கு மனநிறைவைத் தருவதைவிட வாழ்க்கையில் வேறு எந்த  விஷயங்களும் பெரிதல்ல. வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிகப்பெரிய வெற்றி. இதை வெளியில் போய் தேட வேண்டியதில்லை. ஒருவர் இன்னொருவர் போல் செயல்பட வேண்டிய அவசியமில்லை. தனக்கென்று ஒரு துறையைத்  தேர்வு செய்து அதில் நம்பிக்கை வைத்து செயல்பட்டாலே மனம் நிறைவாகி மகிழ்ச்சியாக இருக்கும். பன்முகத் தன்மையான செயல்திறன், அறிவுத்திறன், உணர்வுத் திறன் ஆகியவற்றை பகுத்து ஆர்வமுள்ள துறைகளில் திறமையை  வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் உதவ வேண்டும். ஒவ்வொருவரும் குடிமைப் பணி, ஐஐடியில் சேர்வதற்கான கனவை கொண்டிருக்க வேண்டியதில்லை. அறிவியலாளர், மருத்துவர், பொறியாளர்கள் போன்று பொருளாதார நிபுணர் கள், இலக்கியவாதிகள், கலைத்துறையினர், விமர்சகர்கள் சமூகத்தில் வேண்டி யுள்ளது. பண்பட்ட சமூத்தில் வாய்ப்புகள் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது.

மாற்று சிந்தனைகள்...
மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தால், அவர்களால் சுயமான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது. வாழ்க்கையிலிருந்தே அனுபவங்களைக் கற்றுக் கொள்வதற்கு மாற்று சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையின் முக்கியமான இலக்கு என்பது வேலைக்கு ஏற்றார் போல் மனிதர்களை உருவாக்குவதுதான். வேலைக்கான திறன்கள் என்பவை கூடத் தற்போதைய அமைப்பு முறையைப் பின்தொடர் வதற்காகத்தான். அவற்றை எதிர்கொள்ளவோ, மேம்படுத்தவோ வழிகள் இல்லை.  மேலும் தற்போதைய மாற்றங்கள் கடவுளால் தரப்பட்டன. அவை மனித  வாழ்வு மீதும், வாழ்க்கைத் தரம் மீதும் ஏற்படுத்துகிற தாக்கங்கள் பற்றிய விமர்சனம் தேவையில்லை. இத்தகைய மாற்றங்கள் கொண்டுவந்த சக்திகள் கண்ணில்  காண முடியாதவை. நமக்கு முன்னால் இருக்கிற ஒரே வாய்ப்பு தற்போதைய மாற்றத்தின் போக்கோடு கலந்து நாமும் பயணிப்பதுதான் என்று  புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஒரு நல்ல குடிமகன் என்பவர் அரசுக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் இணங்கியவர். அரசின் நல்ல தலைமை மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ளவர். இன்றைய சமூக அமைப்பு முறையை  ஏற்றுக்கொண்டவர். அவர்தான் நல்ல குடிமகன் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

அக்கினிபாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருந்த போது ஒன்றிய அரசு சொன்ன அறிவுரைகள்தான் இவை. வாழ்க்கை என்பது பல வகையான மகிழ்ச்சிகளின் களம் என்பதை நாம்  புரிந்து கொள்ள வேண்டும். கண்டடைதலும், அதில் வளர்ச்சி பெறுதலும் இன்பங்களில் முதன்மையானவை. ஒரு குழந்தைக்கு ஒரே ஒரு இளமைப் பருவம்தான். அதன் உற்சாகத்தையும், விளையாட்டையும், தானாக கற்றுக் கொள்வதன் பேரின்பத்தையும் அது தன் எதிர்காலத்தின் பொருட்டு முழுமையாகத் தியாகம் செய்ய வேண்டுமா? அந்த எதிர்காலம் என்னவென்றே தெரியாத ஒன்று. அப்படிக் கற்றால் எதிர்காலம் வெற்றியாகும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அப்படிக் கல்லாதவர்கள் அதே வெற்றியை அடைய மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது.  குழந்தைகளின் மகிழ்ச்சி, படைப்பூக்கம் குறையாமல் அளிக்கப்படும் கல்வியே  சிறந்தது. ஓவியத்தில் ஆர்வம் கொண்ட சிறுவன் எதற்காக பல ஆண்டுகள் அறிவிய லைப் பயில வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதே நேரம் ஓவியத்தை மட்டும் நம்பி அவனால் எப்படி வாழ முடியும் என்ற குழப்பமும் கூடவே இருக்கிறது. ஆகவே கல்வியும், தனித்திறனும் ஒன்றிணைந்த கல்வி முறை தேவைப்படுகிறது.

ஒன்றிணைந்த கல்வி முறை
பள்ளிக்கூடம் மாணவர்களின் அறிவாற்றலை மட்டும்தான் வளர்க்கிறது. கதைகளும், இலக்கியமும்தான் அவர்களின் ஆளுமைகளை வளர்க்கிறது. எல்லாக் குழந்தைகளும் கற்பனை செய்யவும், கதை கேட்கவும், கதைசொல்லவும் ஆசைப்படு கின்றன. ஆனால் அதற்கான வழிகள் பள்ளியிலும் கிடையாது. வீட்டிலும் இல்லை.  கதை கேட்கும், கதை சொல்லும் குழந்தைகள் நிறைய ஞாபக சக்தியுடையவர்களாக இருப்பார்கள். கற்பனைத் திறன் கொண்டவர்களால் மட்டுமே எதையும் புதிதாக உருவாக்க முடியும். பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் வந்துவிடாது. கற்றுத் தரும் முறைகளில் மாற்றம் தேவை. அதற்கு  எளிய வழி கதை சொல்வதை முதன்மைப்படுத்திய கற்பனைத் திறனை வளர்க்கும்  கல்வி முறை உருவாக வேண்டும். மாணவர்களின் மரபான அறிவும், தனித்திறனும், தொழில் நுட்பங்களும் அடையாளம் காணப்பட்டு வாழ்வோடு இணைந்த கற்றுத்தருதல் அவசியம். பள்ளிக் கல்விக்கும், அனுபவக் கல்விக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. பள்ளிக் கல்வியை பாடசாலையில் பெறுகிறோம். அனுபவக் கல்வி குடும்பம், மரபு, கலாச்சாரம், சுற்றுச்சூழல் ஆகிவற்றிலிருந்து கிடைக்கிறது. இரண்டும் ஒரு மனிதன் வளர்ச்சிக்கு முக்கியமானது.

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) தேனி மாவட்டக்குழு உறுப்பினர்