குடியரசு துணைத் தலைவருக்கு ஒரு திறந்த மடல்
மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு வணக்கம். சட்டப் பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன்வரைவுகள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரை யறை செய்து உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு தங்களை மிகவும் ஆத்திரம டையச் செய்துள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. நாம் எங்கே போய் கொண்டிருக் கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? நீதிபதி கள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல் படுகிறார்கள், எந்த அடிப்படையிலும் குடி யரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற நீதி பதிகள் உத்தரவு போட முடியாது. உச்சநீதி மன்றத்தின் வேலை அரசியல் அமைப்பை விளக்குவது மட்டுமே என்றெல்லாம் கூறி யுள்ள நீங்கள் உச்சநீதிமன்றத்திற்கு தனி அதிகாரம் அளிக்கும் பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணை யாக மாறியுள்ளது என்று கொந்தளித்திருக் கிறீர்கள். அரசியல் சட்டத்தின் மீதும் குடியரசுத் தலைவர் பொறுப்பின் மீதும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் கரிசனம் கண்ணீர் வர வைக்கிறது.
தாங்கள் தலைமை தாங்கி நடத்தும் நாடாளுமன்ற மாநிலங்களவையை நீங்கள் ஜனநாயக முறைப்படிதான் நடத்தி வருகிறீர்களா என்பதற்கு உங்கள் மன சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள், அப்படியொன்று உங்களுக்கு இருந்தால். நாடாளுமன்றத்தில் அத்துமீறி சிலர் நுழைந்தது குறித்து கேள்வியெழுப்பிய ஒரே குற்றத்திற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் 33 பேரும், மாநிலங்களவையைச் சேர்ந்த 45 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டது தங்க ளுக்கு நினைவிருக்கலாம்.
மாநிலங் களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது சாட்சாத் நீங்களே தான். அப்போது தங்களது ஜனநாயக உணர்வை சலவைக்கு போட்டிருந்தீர்களா? மோடி ஆட்சிக் காலத்தில் 232 நாடாளு மன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இதுதான் இந்த ஆட்சி நாடாளுமன்றத்திற்கு தரும் மரியாதை. அந்த இடைநீக்கத்தில் நீங்களும் ஒரு பகுதி யாக இருந்தீர்கள் அல்லவா? சுதந்திர இந்திய நாடாளுமன்ற வர லாற்றிலேயே தங்கள்மீது மட்டும்தான் மாநிலங்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அமைச்சர், வக்பு வாரிய மசோதா புகழ் கிரண் ரிஜிஜூ என்ன கூறினார் தெரியுமா? தன்கர் ஒரு விவசாயி மகன். அவருக்கு எதிராகப் பேசுவது விவசாயிகளுக்கு எதிரானது என்று விவகாரம் பேசினார். இந்த புண்ணியவாளர்கள்தான் வேளாண் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தவர்கள் என்பது ஒருபுறமிருக்க, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவா தம் நடத்தவோ, வாக்கெடுப்பு நடத்தவோ கூட தாங்கள் முன்வரவில்லை. மாறாக, அவைத் தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாகக் கூறப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தி களங்கத்தை துடைத்துக் கொள்ள வேண்டியதுதானே? ஆனால் நீங்கள், இப்போது நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? என்று கேள்வி கேட்கிறீர்கள். குடியரசுத் தலைவர் குறித்து இந்த ளவு கவலைப்படும் நீங்கள், தற்போதைய குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரௌ பதி முர்மு அவர்களை புதிய நாடாளு மன்ற கட்டடத் திறப்பு விழாவிற்கு கூட அழைக்கவில்லையே? நாடாளுமன்ற கட்டடத்திற்கு எந்த வகையிலும் தொடர் பில்லாத மடாதிபதிகளும், சாமியார்களும் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது, இந்த நாட்டின் குடி யரசுத் தலைவர், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் தகுதி கொண்டவர்.
ஒரு வகையில் நாடாளுமன்றத் தின் தலைவரையே அழைக்காமல் அந்த விழாவை நடத்தியபோது குடியரசு துணைத் தலைவரான நீங்கள் கொட்டாவி விடக்கூட வாயைத் திறக்கவில்லையே ஏன்? அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை பிரதமர் மோடி, அம்பானி, அதானி உட்பட கார்ப்பரேட் முதலாளி களை அழைத்து நடத்திய போதும், குடிய ரசுத் தலைவருக்கு அழைப்பு இல்லை. இதற்கு காரணம் மதச்சார்பின்மையின் மீது இந்த அரசுக்கு இருக்கிற மரியாதை அல்ல. திரௌபதி முர்மு புறக்கணிக்கப் பட்டதற்கான மர்மத்தை மனுநூலை படித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்போதும் நீங்கள் மவுனமாகவே இருந்தீர்கள். உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்புக்கு காரணம் தமிழ்நாட்டினுடைய ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி. அவர் தனது அரசியல் சட்ட கடமைகளை மறந்து சட்ட முன்வரைவுகளை பரணில் தூக்கி போட்டிருந்தபோது அவரை அழைத்து நீங்கள் அறிவுரையோ, ஆலோ சனையோ கூறவில்லை.
இப்போது ஆளுநர் ரவியின் நடவடிக்கை சட்ட விரோத மானது என்று உச்சநீதிமன்றம் உச்சந்தலை யில் ஓங்கிக் குட்டிய நிலையில், அவரை நேரில் அழைத்து குட்டுப்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி அவரை ஆரத்தழுவிக் கொள்கிறீர்களே இது நியாயமா? இப்போதாவது அவருக்கு நல்ல புத்தி சொல்லி அனுப்பக் கூடாதா? உங்களால் எப்படிச் சொல்ல முடியும்? குடியரசு துணைத் தலைவர் ஆவதற்கு முன்பு மேற்கு வங்க ஆளுநராக இருந்த போது, அந்த மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பதையே ஆளுநர் பணியென்று செய்து கொண்டிருந்தவர் தானே நீங்கள். தன்கர் அவர்களே, ஒரு பிரச்சனையை திசை திருப்புவதில் பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரம் நிபுணத்துவம் வாய்ந்தது. நீங்க ளும் கூட பாஜக பள்ளியில் படித்தவர் தான். இன்னும் சொல்லப்போனால் அதே பாடத்தைத்தான் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பின் வெம்மையை தாங்கிக் கொள்ள முடியாத நீங்கள் சட்டென்று அண்மை யில் ஒரு நீதிபதியின் வீட்டில் பணம் கைப் பற்றப்பட்டதே, அதில் எடுத்த நடவடிக்கை என்ன? என்று திசை திருப்பி விட்டிருக் கிறீர்கள்.
அந்த நீதிபதியின் மீது நட வடிக்கை எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் அயோத்தி வழக்கு, ரபேல் ஊழல் வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் நாடாளுமன்ற மாநிலங் களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் அல்லவா? அவரை அவையில் பார்க்கும் போது உங்களுக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லையா? வாய்ப்பு இல்லை தான். நீங்கள் எந்த பட்டறையில் தயாரிக்கப் பட்ட ஏவுகணை என்பதை அறிந்தவர் அறிவாராக! அன்புடன் மதுரை சொக்கன்