tamilnadu

img

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த ராணுவ மேஜர் மரணம்

தேனி, மார்ச் 17- அருணாசலப்பிர தேசத்தில் ஏற்பட்ட ராணுவ விபத்தில் தேனி மாவட்டம் ஜெயமங்க லத்தை  சேர்ந்த மேஜர் ஜெயந்த் உயிரிழந்தார். விமானம் மூலம் இவரது உடல் கொண்டு வரப்பட்டு சனிக்கிழமை  சொந்த ஊரில்  அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட உள்ளது.  பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தம்பதியர் ஆறு முகம் - மல்லிகா. இவர்களின் ஒரே மகன்  ஜெயந்த்(37). இவர் இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வியாழனன்று  அரு ணாசலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலி காப்டரில் லெப்டினன்ட் விவிபி.ரெட்டி உடன் சென்று கொண்டிருந்தார். சங்கே எனும் கிராமத்தில் இருந்து மிசாமாரி  எனும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது தொலைத்தொடர்பு துண்டிக் கப்பட்டது.

இந்நிலையில் மேற்கு சுமேங் மாவட்டத்தில் மண்டாலா அருகே போம்  டிலா எனும் இடத்தில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. பொதுமக்கள் தகவ லின் பேரில் போலீசார் மீட்புப் பணியில் ஈடு பட்டனர். அப்போது லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோர் இறந்தி ருப்பது தெரிய வந்தது. இருவரது உடலுக்கும் தில்லி விமா னப்படை தலைமையகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு ரெட்டியின் உடல் ஹைதரா பாத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதே விமானத்தில் மேஜர் ஜெய்ந்த் உடல் வெள்ளிக்கிழமை  இரவு மதுரை வந்து பின்பு அங்கிருந்து ஜெயமங்கலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு சனிக்கிழமை  காலை 8 மணிக்கு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. ஜெயந்திற்கும் சாராஸ்ரீ என்ற பெணு ணுக்கும் கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு  திருமணமானது. குழந்தைகள் இல்லை. சிறு வயதில் இருந்தே படிப்பில் சிறந்து  விளங்கிய ஜெயந்த் பள்ளி, கல்லூரியில் தேசிய மாணவர் படை பிரிவில் சேர்ந்து  துப்பாக்கிச்சுடும் போட்டியில் மாநில அள விலான பரிசுகளை பெற்றுள்ளார் .ஜெயந்த் உயிரிழந்த சம்பவம் ஜெய மங்கலம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.