18 வருட கனவு...
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத், தில்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. பிளே ஆப் சுற்றின் முடிவில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தி, பெங்களூரு (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஆர்சிபி) அணி முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று புதிய வர லாறு படைத்தது. ஐபிஎல் கோப்பை யை பெற்றுக் கொண்ட பெங்களூரு வீரர் ராஜத் பட்டிதார் முன்னாள் கேப்டன் கோலியிடம் கொடுக்க, கோலி உள்ளிட்ட பெங்களூரு வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். குறிப்பாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது போல நாடு முழுவதும் பெங்களூரு அணியின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டு மின்றி அனைத்து தரப்பினரும் ஐபிஎல் கோப்பையை வென்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்த
ஆனந்த கண்ணீரில் நனைந்த குஜராத் மைதானம்
இறுதி ஆட்டத்தை காண பெங்களூரு அணியின் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெயில், ஏ.பி.டி. வில்லியர்ஸ் உள்ளிட்ட பலர் இறுதிப் போட்டி நடை பெற்ற குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குவிந்து இருந்தனர். பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவுடன், கோலி, கிறிஸ் கெயில், ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர். குறிப்பாக கோலி உணர்ச்சிப் பெருக்கால் மைதானத்தில் கீழே கவிழ்ந்து விழுந்து அழுதார். இதனால் ஆனந்த கண்ணீரில் அகமதாபாத் மைதானம் நனைந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் வாழ்த்து
18 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக ஐபிஎல் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்ததுடன், பெங்களூரு அணியின் வெற்றியை வைத்து வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பதிவில்,”18 ஆண்டுகள் காத்திருப்பு இறுதியாக முடிந்தது, புதிய சாம்பியன் ஆர்சிபிக்கு (பெங்களூரு) வாழ்த்துகள். 18 வயதாகிறதா? நீங்கள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது. வாக்காளராகப் பதிவுசெய்து, ஒரு சாம்பியனைப் போல வாக்களிக்கத் தயாராக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு நாடு முழுவதும் கொண்டாட்டம்... குவியும் வாழ்த்து
பரிசுகளை அள்ளிய தமிழ்நாடு வீரர்
1. ஆரஞ்சு தொப்பி - சாய் சுதர்சன் (அதிக ரன்கள் - ரூ.10 லட்சம்) குஜராத் - 15 போட்டிகளில் 759 ரன்கள்.
2. ஊதா தொப்பி - பிரசித் கிருஷ்ணா (அதிக விக்கெட்டுகள் - ரூ.10 லட்சம்) குஜராத் - 15 போட்டிகளில் 25 விக்கெட்டுகள்.
3. மிகவும் மதிப்பு மிக்க வீரர் - சூர்ய குமார் (320.5 புள்ளிகள் - ரூ.15 லட்சம்) மும்பை - 15 போட்டிகளில் 717 ரன்கள் குவிப்பு.
4. சிறந்த வளரும் இளம் வீரர் - சாய் சுதர்சன் (23 வயது - ரூ.10 லட்சம்).
5. சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - வைபவ் சூர்யன்ஷி (206.6 ஸ்டிரைக் ரேட் - எலெக்ட்ரிக் கார்) .
6. அதிக சிக்ஸர்கள் - நிகோலஸ் பூரன் (40). 7. அதிக பவுண்டரிகள் சாய் சுதர்சன் (88).
8. அதிக டாட் பந்துகள் முகமது சிராஜ் (151 டாட் பந்துகள்).
9. சிறந்த கேட்ச் - கமிந்து மெண்டிஸ் (டெவால்டு பிரீவிஸுக்கு எதிராக பிடித்தது).
10. பேர் பிளே விருது - சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே). 11. பேண்டஸி கிங் - சாய் சுதர்சன் 1,495 புள்ளிகள். இதில் சாய் சுதர்சன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா, தமிழ்நாடு முதலமைச்சர்கள் வாழ்த்து
பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி யதற்கு கர்நாடகா முதலமைச்சர் சித்த ராமையா தனது வாழ்த்து மடலில், “பெங்களூரு அணி வீரர்கள் அனை வரையும் நான் வாழ்த்துகிறேன். அதே போல அவர்களின் ரசிகர்களையும் வாழ்த்துகிறேன். முழு நாடும், மாநிலமும் அவர்களைப் பற்றி பெருமை கொள்கிறது. ஆர்சிபி (பெங்களூரு) ஐபிஎல்லை வென்றதில்லை. பதினெட்டாவது சீசன் வரை போராடி ஐபிஎல் கோப்பையை பெங்களூரு வீரர்கள் வென்றுள்ளனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” என அவர் கூறினார்.
மு.க.ஸ்டாலின்
அதே போன்று தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர் சிபி அணிக்கு (பெங்களூரு) வாழ்த்துகள். ஆச்சரியங்கள் நிறைந்த சீசனின் பரபரப்பான முடிவு. விராட்கோலியின் நீண்டகால கனவு தற்போது நனைவாகியிருக்கிறது. இன்றைய இரவுக்கான கிரீடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சென்னை அணி அடுத்த சீசனில் சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்போம்” என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொண்டாட்டம் எப்படி?
ஐபிஎல் உலகில் பெங்களூரு அணிக்கு ஒரு கிளைமேக்ஸ் உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை கைப்பற்றும் அளவிற்கு பலமான வீரர்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் களமிறங்கும். ஆனால் கடைசி கட்ட சொதப்பல்களால் பெங்களூரு அணி கடந்த 17 ஆண்டு களாக ஐபிஎல் கோப்பையை கையிலேந்தாமல் வெறுங்கை யுடனே இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு முறையும், அதாவது 17 சீசனும் கண்டிப்பாக கோப்பையை வெல்வோம் என மனம் தளராமல் பெங்களூரு அணியின் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும். இதனை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் புதிய “மோட்டிவேசன் (ஊக்கம் அல்லது தன்முனைப்பாற்றல்)” ஆக கொண்டாட ஆரம்பித்தனர். குறிப்பாக சென்னை, பெங்களூருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணியாக பெங்களூரு உருவெடுத்தது. சென்னை அணிக்கு இருப்பதை போல நாடு முழுவதும் ரசிகர்கள் படை உருவானது. மேலும் பெங்களூரு அணி கோப்பையை கண்டிப்பாக வெல்லும் என “ஈ சாலா கப் நமதே” என்ற ஹேஸ்டேக் ஒன்றையும் ஐபிஎல் பெங்களூரு ரசிகர்கள் உருவாக்கினர். “ஈ சாலா கப் நமதே” மற்றும் “ஆர்சிபி மோட்டிவேசன்” 2016 முதல் பிரபலமடைய நாடு முழுவதும் பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் கூட்டம் பிரம்மாண்ட அளவில் திரண்டது. இதனால் ஐபிஎல் கோப்பையை வென்ற பெங்களூரு அணியை ஒட்டு மொத்த நாடும் கொண்டாடி வருகிறது.
பெங்களூரில் தடியடி ; பாராட்டு
பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் கர்நாடக மாநிலம் முழுவதும் ஐபிஎல் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். குறிப்பாக பட்டாசு வெடிப்பால் பெங்களூரு நகரம் மினி தீபாவளியை கொண்டாடியது. கர்நாடக மாநிலத்தின் சில இடங்களில் மது போதையில் ரசிகர்கள் அடாவடி செயலில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு ரசிகர்கள் அனைவரும் இளம் வயதினர். அதாவது பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பதால், சில இடங்களில் காவல்துறையினர் லேசான அளவில் தடியடி நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனால் கர்நாடக காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.