tamilnadu

img

தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்க அமுல் நிறுவனம் திட்டம்

தமிழகத்தில் பால் விற்பனையை  தொடங்க அமுல் நிறுவனம் திட்டம் 

தமிழகத்தில் பால் விற்பனையை  தொடங்க அமுல் நிறுவனம் திட்டம்

அமுல் நிறுவனம் (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்), படிப்படியாக தமிழ்நாட்டின் பால் சந்தையில் நுழைய  திட்டமிட்டுள்ளது.  இதனிடையே உள்ளூர் விவசாயி களுக்கு கூட்டுறவு மாதிரி வழங்கப்படு கிறது என்று திருச்சியில் அமுல் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் அமித்  வியாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், ஆந்திராவில்  உள்ள சித்தூரில் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட்டு பெங்களூரு வுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நாங்கள் சென்னையில் தயிர் விற்ப னையைத் தொடங்கினோம். இதைத் தொடர்ந்து, பால் சந்தையில் நுழைய இருக்கிறோம். உள்ளூர் விவசாயி களுக்கு கூட்டுறவு மாதிரியை வழங்கு வோம். வேலூர் அருகே சுமார் 50 ஆயிரம் லிட்டர் பாலை, நியாய விலை யில் கொள்முதல் செய்து வரு கிறோம்.

கால்நடை பராமரிப்பு, பால்  உற்பத்தியை மேம்படுத்துதல் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களின் வருமானத்தை மேம்படுத் துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆர்கானிக் வகை யான வேளாண்மையில் அமுல் நிறு வனம் ஈடுபட்டுள்ளது. மேலும், மாநிலத் தில் தனது சொந்த இயற்கை உரங்களை  இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்கப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக் குள், நாமக்கல்லில் உள்ள தனது தொழிற்சாலையில் உரம் உற்பத்தியை அமுல் நிறுவனம் தொடங்கவுள்ளது.   தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்தி ராவை குறிவைத்து தென்னிந்தியா முழுவதும் தயாரிப்புகளை அனுப்ப நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமுல், அதன் கரிம உரங்களை தூள், துகள்கள்  மற்றும் திரவம் உட்பட பல வடி வங்களில் விநியோகித்து வருகிறது. கூடுதலாக, அமுல் ஆர்கானிக் விவ சாய விளைபொருட்களை தமிழ்நாட்டில் இருந்து கொள்முதல் செய்து, நம்பக மான அமுல் பிராண்டின் கீழ் சந்தைப் படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.